சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நாளை (14) முதல் 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், Read more
திருநெல்வேலி கலாமன்றம் சனசமூக நிலையத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
மட்டக்களப்பு ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் கரையாக்கன்தீவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளரும், ஆசிரியருமான தோழர் வாசுமாமா (சின்னத்தம்பி உமையகாந்தன்) அவர்கள் இன்று (12.02.2022) சுகயீனம் காரணமாக மரணித்த செய்தியறிந்து மிகுந்த துயரடைகின்றோம்.
நீதிமன்ற உத்தரவையடுத்து அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது 2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்
கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளை (12.02.2022 ) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவிருந்த தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களும்; அரசியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 16.02.2022ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்..
வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.. வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.