இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய பிராந்தியத் தலைவர் விகாஸ் கோயலுடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதுகுறித்த விடயங்களைப் பற்றி செவ்வாய்க்கிழமை (20) கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.