நேற்றைய தினம் கழகத்தின் முன்னாள் மூத்த உறுப்பினரும் நெடுங்கேணி குளவிசுட்டான் அ.த,க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபருமாகிய திரு சி.ராஜரட்ணம் அவர்களின் மணிவிழா மற்றும் மணிவிழா மலர் வெளியீடும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது . நிகழ்வில் கட்சியினுடைய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிமனையின் உயரதிகாரிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் புலமை பரிட்சையில் வெற்றி பெற்றமாணவர்கள், ஆசிரியர் கெளரவிக்கப்பட்டனர்.