Header image alt text

நீடித்த கடன் வசதியை அனுமதித்த போது சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட இலக்குகளில் முக்கிய இலக்கான ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இரண்டாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், திருத்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அதனை ஒத்திவைக்க ஆளும் கட்சியினர் பிரேரணை முன்வைத்தனர். Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் இடம்பெற்ற அகழ்ப் பணிகளில் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து, இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  கொக்குத்தொடுவாயில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள்  கண்டெடுக்கப்பட்டன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read more