Posted by plotenewseditor on 13 July 2023
Posted in செய்திகள்
வடக்கு ரயில் மார்க்கத்தில் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான பகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இன்று (13) காலை கொழும்பில் இருந்து புறப்பட்டுச்சென்ற யாழ். தேவி ரயிலில் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட உள்ளிட்டவர்கள் அனுராதபுரத்தை சென்றடைந்தனர். இதன்போது, அமைச்சரை யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். Read more