கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2023) மாலை அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
34ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இன்று (15.07.2023)
மன்னார் மாவட்டம் முருங்கனில் இடம்பெற்ற 34 வது வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வின்போது மரணித்த அனைத்து தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
15.07.1998இல் மரணித்த கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்), அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன், மைத்துனர் தாசியஸ் ஸ்டெனிஸ் லொஸ் மற்றும் மெய்க்காவலர்களான நோயல் ஹெட்டியாராய்ச்சி, சரத் வீரசேகர ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
15.07.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் கிறிஸ்டி (இ.வசந்தராஜா- திருகோணமலை) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…