Header image alt text

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆகிய இரண்டு தினங்களிலும் இடம்பெற்றது.

நன்றி தலைவர் அவர்களே!
நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும். நான் நினைக்கின்றேன், இலங்கைப் பாராளுமன்றத்தில், ஓத்திவைப்புப் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வளவு நேரம், ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பிரேரணை இதுதான். பாலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பை உடனடியாக நிறுத்தவும், சுதந்திர பலஸ்தீன அரசொன்றை நிறுவவும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட தீர்மானங்களை, அது தொடர்பான உலகளாவிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த வெற்று வார்த்தைகளுக்குப் பதிலாக நடைமுறைச் செயற்திட்டத்தின் அவசியம் பற்றி, சபை இந்த ஒத்திவைப்பு வேளையிலே பிரேரிக்கின்றது என்று அவர் கூறியிருந்தார்.

Read more