இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு சட்ட ரீதியில் நியாயம் கிடைக்காததால், மனித உரிமை மீறல் குறித்து முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விசாரணையின் பின்னர் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தனது தந்தை கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தன்னிச்சையான கைது என்றும் தனது தந்தைக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.