கொரோனா நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கொழும்பு இடையிலான குளிரூட்டிய ரயில் சேவையை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 29ம், 30ம், 31ம் மற்றும் 1ம் திகதியென நான்கு நாட்களுக்கு பரீட்சார்த்தமாக இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது. இதில் பயணிப்போர் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கும் காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 மணிக்கும் சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.