மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற, மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக, நேற்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வெளியேறும் 11 இடங்களில் முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மூலம், 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.