நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடை மே.28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். பயணத்தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படாது என அறிவித்துள்ள  அரசாங்கத் தகவல் திணைக்களம், அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரமே பயணத்தடை தளர்த்தப்படுகின்றது என அறிவித்துள்ளது.

இதேவேளை, 27ஆம் திகதி நிலைமையை கவனத்தில் கொ​ண்டே, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமென அத்திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.