யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமரபுரம், பரந்தனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் தேவன் (தேவராஜா – குமரபுரம்) அவர்களின் அன்புத் தாயாருமான கோவிந்தசாமி புவனேஸ்வரி அவர்கள் (05.07.2023) புதன்கிழமை காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)