முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கலை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், தாம் முன்னெடுக்கும் நிர்வாக முடக்கல் நடவடிக்கைக்கு அனைவரும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.