Header image alt text

வவுனியா முன்னாள் உப நகரபிதா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர், திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற முதியோர், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150 பேருக்கு புத்தாடைகள் அன்பளிப்பு. 

IMG_6530கோவில்குளம் சிவன் கோவில் அன்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற போரினால் பாதிக்கபட்டு உடைமைகள், உறவுகள் அனைத்தையும் இழந்த எமது உறவுகளான  முதியோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரில் விழுப்புண்ணுற்றவர்களும் என 150ற்கும்  மேற்பட்ட எமது உறவுகளுக்கு தீப திருநாளை முன்னிட்டு கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினால் அன்பளிப்பு செய்யபட்ட ஆடைகளை வவுனியா கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபகரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால்  இன்று கையளிக்கபட்டது.

மேற்படி நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பபட்டிருந்தது. இதில் அதிதியாக கலந்து கொண்ட கழகத்தின் ஸ்தாபகரிடம் அங்குள்ள நமது உறவுகள் தங்கள் வாழ்க்கை நிலை பற்றி கருத்து தெரிவிக்கையில்…

தாங்கள் மிகவும் மனவேதனைகளுடன் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் போராளிகளான தங்கள் பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்தில் இழந்ததால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.  போராட்டத்தில் கால், கைகளை இழந்த போராளிகள் கருத்து தெரிவிக்கையில் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட காரணத்தினால் சமூகத்தினராலும், உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தங்களை வந்து பார்த்து உதவி செய்ய யாருமே முன் வருவதில்லை என்றும் சிவன் கோவில் நிர்வாக சபையினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மனிதாவிமான அடிப்படையில் தான் தங்களை கவனித்து வருவதாகவும் கூறினர். அத்துடன் நாட்டின் விடுதலைக்காக போராடியதால் தான் தாங்கள் இன்று  இந்த ஆசிரமத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கண்ணீர் மல்க கூறி தயவு செய்து தமக்கு உதவுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கழகத்தின் ஸ்தாபகர் திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் எதோ ஒரு வகையில் இவர்களின் இந்த நிலைக்கு தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தான் இருகின்றோம். ஆசிரமங்களில் வாழும் எமது மக்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமையில் வாடுவோரின் அளவு இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதில் நாங்கள் வேதனைப்படும் விடயம் என்னவெனில் மேற்படி பாதிக்கப்பட்டோரை அவர்களின் உறவுகள் கூட நேரில் வந்து பார்ப்பது கிடையாது என்பது தான்.

வெளி நாடுகளில் வாழும் அவர்களின் உறவுகள், நண்பர்கள் கூட தங்களை கைவிட்டு விட்டதாக கூறுகின்றனர். உதவி செய்ய முடியாமல் இருந்தாலும் இவர்கள் இருக்கும் இந்த நிலைமையில் அவர்களுடன் தொடர்பை வைத்திருந்தாலே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார். அத்துடன் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற நல்ல உள்ளங்கள் தயவு செய்து உதவ முன் வர வேண்டும். நம் இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் உணர்வுகளை நாம் நிச்சயமாக மதிக்க  வேண்டும். அமைப்பு  வேறாக இருந்தாலும்  நானும் ஒரு போராளி என்கின்ற அடிப்படையில் அவர்களின் வேதனையினை என்னால் இலகுவாக உணர முடிகின்றது. எந்த அமைப்பு என்பது முக்கியமில்லை எல்லா போராளிகளும் போற்றப்பட வேண்டியவர்கள் தான். உறவுகள் மற்றும் சமூகம் போராளிகளை ஒதுக்குவது மிகவும் வேதனையான விடயமாக இருகின்றது.

இன்றைய சூழலில்  முதியோர்கள், போராளிகள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்  என ஆயிரக்கணக்கான நம் உறவுகள் அநாதை ஆசிரமங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர். நூறில் ஒன்று தான் இந்த கோவில்குள அன்பக மக்கள். இன்னும் எத்தனையோ அன்பகங்கள் வடமாகாணம் முழுவதும் இருகின்றது. இந்த நிலை மாற வேண்டும் இதன் மாற்றத்தை நாங்கள் தான் உருவாக்க வேண்டும். இன்றைய தீப திருநாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணைத்து தமிழ் உறவுகளிடமும் நான் பணிவாக கேட்டுக்கொள்ளும்  ஒரு விடயம் தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை அது சிறிய உதவியாக  இருந்தாலும் பரவாயில்லை செய்யுங்கள் என்று வேண்டி நிற்கிறேன்.

முக்கிய குறிப்பு                       இந்த ஆசிரமத்தில் வசிக்கும் போராளிகளின் பெற்றோர் 10 பேருக்கு உடல் நிலை சற்று மோசமாக இருக்கின்ற காரணத்தினால்இ வைத்தியர்கள் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி பயன்படுத்தப்படும் மெத்தை ‘றயவநச டிநன’ பாவிக்கும் படி கூறியுள்ளனர். இதற்குரிய உதவியினை ஆசிரம நிருவாக சபையினர் என்னிடம் கேட்டுள்ளனர். உதவ விரும்பும் உள்ளங்கள் நேரடியாகவோ அல்லது எங்கள் கழகத்தினூடாகவோ உங்கள் உதவிகளை செய்ய முடியும்.

நன்றி.

தொடர்புகளுக்கு

திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்),

கோவில்குள இளைஞர் கழகம் இல 58

5ம் ஒழுங்கை கோவில்குளம், வவுனியா.

0094 779942797, 0094 242222527

IMG_6510IMG_6498IMG_6496IMG_6491IMG_6488IMG_6485IMG_6483IMG_6480IMG_6476IMG_6473IMG_6457IMG_6452

IMG_6552 (1)IMG_6530IMG_6519

வலி. வடக்கு வீடழிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை-யாழ் அரச அதிபர்-

யாழ். வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றுபகல் அரச அதிபரை ஊடகவியலாளர்கள் சந்தித்து வலி.வடக்கு பிரச்சினை தொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை. வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டேன். அது தொடர்பாக பிரதேச செயலர்கூட இதுவரை எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிந்து கொண்டேன் எனவும் அரச அதிபர் கூறியுள்ளார். நாவற்குழி பிரதேசத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? என ஊடகத்தினர் கேட்டபோது, நாவற்குழி பிரதேசத்தில் காணிகள் பங்கிட்டு வழங்கப்படுவது தொடர்பாக வீடமைப்பு அதிகார சபையினரால் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. இக் காணிகள் ஏற்கனவே வீடமைப்பு திட்டத்திற்காகவே வீடமைப்பு அதிகார சபையிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது அந்த திட்டத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது அது தொடர்பாக அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அறிவிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளார்.

யாழ். அரச அதிபர் ஜப்பான் தூதரக அதிகாரிகள் சந்திப்பு-

யாழ். மாவட்டத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தேவைகள் குறித்தும் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் அந்நாட்டு தூதரக உயரதிகாரிகளுக்கும் இடையில் கலந்துடையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற இக் கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தைச் சேர்ந்த எல்.நாசி .பி.சினோசி உள்ளிட்ட ஐவர் பங்கு கொண்டிருந்தனர். சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்.மாவட்த்தில் மீள்குடியேற்றப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டிய தேவையுள்ளது. அதனைவிட வாழ்வாதாரத் தொழில் துறைகளான மீன்படி, விவசாயம் என்பனவற்றையும் முன்னேற்ற வேண்டியுள்ளது. எனவே இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன என்றார்.

அரச தலைவர்கள் மாநாடு-

22வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில், கொழும்பு நகரை மையப்படுத்தி மாநாடு இடம்பெறவுள்ளதன் காரணமாக நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு நகரின் பல வீதிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் நிறைவிற்கு கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் தொழிற்துறை பிரிவின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க உயர்மட்ட பிரதிநிதிகள் வருகை-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார செயலர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் வெளிவிவகார அமைச்சர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ரொட்னி பெரேரா கூறியுள்ளார். வெளிநாடுகளின் அரச தலைவர்கள் 14ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வரவுள்ள அரச தலைவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி-

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சிகள் கோவாவை அண்மித்த கடற்பரப்பில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கில், கடற்படையின் சமுத்திர கப்பல் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகும் இந்த பயிற்சி எதிர்வரும் 08ஆம் திகதிவரை இடம்பெறும் என கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையில், வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டுப் பயிற்சிகள் கடந்த வருடம் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்றதையும் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய நினைவுகூர்ந்தார்.

வயது வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு-

இலங்கையில் வயது வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, எதிர்வரும் 28 வருட காலப்பகுதியினுள், பாரிய சமூக பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சுமணா ஆரியதாச இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின், முதியோர் தொகை அதிகரிப்பைப் போல சிறார் தொகையும் வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2041ஆம் ஆண்டளவில், ஐவரில் நால்வர் வயதானவர்களாக இருப்பர் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் கிறிஸ்தவ ஆலயம்மீது கல் வீச்சு-

யாழ். புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம்மீது நேற்றிரவு ஒயில் ஊற்றி கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சில் தேவாலயத்தின் 26 யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவாலய நிர்வாகத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சுக்குப் பெயர் மாற்றம்-

துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சாக பெயர்மாற்றப்பட்டுள்ளது. பெயர்மாற்றம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இன்றையதினம் பெற்றுக்கொண்டதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியா செல்வதற்கான பிணை வைப்பீடு இரத்து- பிரித்தானியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டத்தை இரத்துச் செய்யவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆறு ஆபத்தான நாடுகளிலிருந்து தமது நாட்டுக்கு பயணிப்போர் இவ்வாறான பிணைப் பணத்தை செலுத்த வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து Read more

வடமாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்; வலியுறுத்தல்

SAM_9712 SAM_9715 SAM_9718 copyகடந்தவாரம் (30.10.2013) வவுனியாவில் வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கி.தேவராசா தலைமையில் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர்கள் உறவினர்கள் சமுகமளிப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு நாட்டில் வர்த்தகர் சங்கம், ஆசிரியர் சங்கம், கலை இலக்கிய சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் என்று பல சங்கங்கள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் காணாமல் போனோர் சங்கம் உருவாகும் அளவுக்கு நாட்டின் மனித உரிமை நிலைமைகள் இருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய சங்கங்கள் நாட்டில் உருவாக விடக்கூடாது என்பதே அரசின் கடும்போக்கான நிலைப்பாடாகும். ஆனால் காணாமல் போனோர் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறா தன்மையும், நாளுக்கு நாள் காணாமல் போனோர் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் நிலைமையுமே காணாமல் போனோர் சங்கங்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. சிறீலங்கா அரசானது காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்து, காணாமல் போனோரை கண்டுபிடித்து உறவினர்களுடன் இணைத்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமளிக்கும் போதே இத்தகைய சங்கங்கள் அற்றுப்போகும். 
உழைத்து தமது குடும்பத்தின் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய வயதில் பல இளைஞர் யுவதிகளும், குடும்ப தலைவர்களும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை நம்பி தங்கி வாழும் நிலையிலிருந்த பல குடும்பங்கள் இன்றும் கூட மீள முடியாத வறுமை நிலையிலுள்ளன. இக்குடும்ப அங்கத்தவர்கள் கண்ணீரோடு படுத்து கண்ணீரோடு எழும் நிலைமை வழமையாகி விட்டது. 
இதுவரை காலமும் இந்த குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு அரசோ, அன்றி அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களோ எத்தகைய முழுமையான நிகழ்ச்சி திட்டங்களையும் முன் வைக்கவில்லை. எனவே கூட்டமைப்பால் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணசபை அரசு இந்த குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பல குடும்பங்களுக்கு துளிர் விட ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணசபையின் அமைச்சுகளூடாக வாழ்வாதார உதவி திட்டங்களையும், புதிய தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும்.
அதேவேளை இறுதி யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு இன்றும் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழுந்து வர முடியாத குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்குமென்று விசேட செயற்றிட்டத்தை ஏற்படுத்தி தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வடமாகாணசபையூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா – காரைநகர் நேரடி பஸ் சேவை-

வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ்சேவை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் தடவையாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் டிப்போவின் உதவி செயலாற்று முகாமையாளர் சிவசுந்தரம் கனகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் குறித்து இரு நாட்டு கடற்படை பேச்சு-

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், இரண்டு நாடுகளதும் கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தியாவின் சுஹன்யா என்ற கப்பலில் வைத்து, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற சர்வதேச எல்லை பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் இவு;விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் தங்களின் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரமாக மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதல் விபத்து-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. 19ஆவது மைல்கல் அருகில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கார் வழுக்கிச் சென்று மதில் சுவர்களில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதியில் ஆட்டோவில் பயணித்தவர் கைது-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில ஆட்டோவில் பயணித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிவேக வீதியில் கடமையில் இருந்த அதிகாரிகளால் குறித்த ஆட்டோ சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிவேக வீதியில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வியிலும், விளையாட்டிலும் முன்னேற மாகாணசபை நடவடிக்கை- தர்மலிங்கம் சித்தார்த்தன்-

1385004_462915623826174_636214904_n1422633_462151070569296_638137179_n

563589_462150803902656_1132796647_n1422443_461148457336224_680191029_nயாழ். பருத்தித்துறை, தம்பசிட்டி உதயத்தாரவை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி விளையாட்டு விழா இன்றுமாலை இடம்பெற்றது. உதயத்தாரகை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு. செந்தூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வின்போது பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்ததுடன், சிறப்புரையும் ஆற்றினார். இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விளையாட்டின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்தும் என்பன குறித்து விளக்கியதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில் இப்பகுதி மாணவர்களும், இளைஞர்களும் இருக்கின்றனர். இந்த மாணவர்களும், இளைஞர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் முன்னேற வேண்டும். இதற்காக எங்களுடைய வட மாகாணசபை முழுமையான முயற்சி எடுத்து இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமென்று கூறினார். இந்த நிகழ்வில் பெண்கள், இளைஞர்கள், ஊர்ப் பிரமுகர்கள் என மிகப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தனர்.

ணுவிலில் உயிருள்ளவரை நட்பிருக்கும் குறும்படம் வெளியீடு-

யாழ். இணுவில் அறிவாலயத்தில் இன்றுகாலை குறும்பட வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. உயிருள்ளவரை நட்பிருக்கும் என்கிற பெயரிலான இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்வினை திரு. ஞானசூரியர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இணுவிலைச் சேர்ந்த திரு. கௌரீசன் அவர்களும் அவருடைய நண்பர்களும் இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கியிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு மேற்படி குறும்படத்தினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு. கு.விக்னேஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில்; இளைஞர்கள், பெண்கள் ஊர் பிரமுகர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சர்கள் பேர்த் நகரில் சந்திப்பு- 

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடல்சார் சங்க கூட்டம் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிலையில், அதில் பங்குகொண்ட நிலையிலேயே மேற்படி அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள்-

பொதுநலவாய வர்த்தகத்துறை அமர்வு கொழும்பில் இடம்பெறும் போது அதில் குறித்த நாடுகளின் முதன்மை வர்த்தக பிரதானிகள் பங்கேற்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இத்தகவலை வெளியிட்டுள்ளார். பொதுவாக இலங்கையில் இருந்து முதலீட்டு சபையின் பிரதிநிதிகள் வெளிநாடு செல்லும்போது, அவர்கள் வேறு நாடுகளின் இரண்டாம் மூன்றாம் நிலை வர்த்தக பிரதானிகளையே சந்திப்பதுண்டு. எனினும் இலங்கையில் நடைபெற போகும் வர்த்தக அமர்வில், பொதுநலவாய நாடுகளைத் தவிர, சீனா மற்றும் அரபு நாடுகளின் உயர் வர்த்தக பிரதிநிதிகள் பங்கு கொள்ளவுள்ளனர். எனவே இது இலங்கைக்கு பாரிய முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பொதுநலவாய மாநாடு – ஜூலி பிஷோப் கருத்து-

சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஆதரவளித்து, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நிச்சயமாக அதற்காக நாடுகளை நாம் ஊக்குவிக்கின்றோம். அந்த தகவல்களை பல விதங்களில் நாம் கனடாவுக்கு வழங்கியுள்ளோம். அது குறித்து அவர்கள் தீர்மானித்திருக்கலாம். பிரதமர் டொனி அபர்ட் உடன் நான் இலங்கைக்கு செல்கின்றேன். இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு அவர்களை நாம் ஊக்குவிப்போம். அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்ப்பதற்கு பிராந்திய நாடுகள் மற்றும் சர்சதேச நாடுகள் என்ற வகையிலும் பொதுநலவாய நாடுகள் என்ற வகையிலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு இது மிகவும் முக்கித்துவம் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன்.

 கடும் செய்தியை கொண்டுசெல்கிறோம்: பிரிட்டன்-

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் பிரிட்டன் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசானது மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் திட்டவட்டமான முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற செய்தியை இலங்கை அரசுக்கு எடுத்துச் செல்லப்போவதாக வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் ஹியூகோ ஸ்வயர் நாடாளுமன்றில் கூறியுள்ளார். பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் ஊடகங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தகவல் சேகரிக்க கட்டுப்பாடுகள் இருக்கலாகாது என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம், பொதுநலவாயம், ஐ.நா. மனித உரிமை பேரவை என்பவற்றினுடனான எமது தொடர்புகள் மூலம் இந்த விடயங்களை நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வந்துள்ளோம் வேறு நாடுகளுடனும் நாம் தொடர்புகளை வைத்திருக்கின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கடல் எல்லையை மீற வேண்டாம் – ராஜித சேனாரத்ன-

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை மீனவர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே இலங்கை மீனவர்கள் 87பேர் இந்திய சிறைகளில் இருப்பதாகவும், இவர்களில் 75 மீனவர்கள் தமிழகத்திலும் ஏனைய 12 மீனவர்கள் ஆந்திராவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீனவர்களின் 16 படகுகளையும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 மன்னார் எரிவாயுக் கிணறுகள் தொடர்பில் மதிப்பீடு-

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட எரிவாயு கிணறுகள் தொடர்பாக மதிப்பீடு மற்றும் வர்த்தக ரீதியான கலந்துரையாடல்களை இலங்கை அரசுடன் மேற்கொண்டு வருவதாகவும் தற்போதைய அகழ்வு பணிகளின் கால எல்லையை 2014 ஏப்ரல் வரை இலங்கை அரசு நீடித்துள்ளதாகவும் கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கெய்ன் இந்தியாவின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்;ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் கெய்ன் நிறுவனம் இதுவரை நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொண்டதுடன் அதில் இரு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டுள்ளது.

 வடக்கில் மீள் குடியமர்த்தக்கோரி முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம்-

வடக்கிலிருந்து புலிகளால் சிங்கள, முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தக் கோரியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இதன்போது சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியமர்த்த கோரியும், பிரிவினையை தோற்றுவிக்க வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்ட பதாதைகளுடன் கோசமெழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,

ஷேக் ஹசீனா இலங்கைக்கு விஜயம்-

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்களாதேஸின் சார்பில்; அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது பங்களாதேஸ்; செய்திதாள் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது எனினும் அவர் இலங்கை மாநாட்டில் ஒருநாள் மாத்திரமே பங்கேற்பார் என்று அந்த செய்திதாள் தெரிவித்துள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ள 37 நாடுகள் உறுதியளிப்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக இதுவரை 37 நாடுகள் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார் ஏனைய நாடுகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் என நம்புவதாக பேச்சாளர் கூறியுள்ளார்.