Header image alt text

காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6 மாதங்கள் விசாரணை-

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதிவரை இவ் ஆணைக்குழு செயற்படவுள்ளது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்திருந்தார். இவ்ஆணைக்குழுவின் காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், இம் மாதம்வரை ஆணைக்குழுவின் காலத்தை ஜனாதிபதி நீடித்தார். இந்நிலையில் இந்த ஆணைக்குழுவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்நிலையில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

செப்டெம்பர் 20ல் ஊவா மாகாண சபைத் தேர்தல்-

ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். ஊவா மாகாண சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் நடைபெறவுள்ள திகதியை அறிவித்துள்ளார் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களில் இன்றும் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. ஊவா மாகாண சபைக்கு 32 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் செப்டெம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 9,42,730 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ராம் மாதவோ பாதுகாப்புச் செயலர் சந்திப்பு-

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவோ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படியான நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக்கூட்டங்களில் அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை-

பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருதானையில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றின் போது, சில பௌத்த பிக்குகள் அத்துமீறி பிரவேசித்து குழப்பத்தை விளைவித்திருந்தனர். இது தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் ஒற்றுமையை சீர்குழைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள், இலங்கையின் ஒன்று கூடல் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை கோரியிருந்தது.

போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ் விசாரணைக் குழுவுக்கு தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2002 பெப்ரவரி 21ஆம் திகதிமுதல் 2011 நவம்பர் 15 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தகவல்களை வரும் அக்டோபர் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் தகவல்களை விசாரணைக்கு குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை அளிப்பவர்கள், தங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட தகவல்களை சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் அனுப்பலாம் என்றும், 10 பக்கங்களுக்கு அதிகம் இல்லாது அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தல்-

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 36பேர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஐ.நா சபையின் அகதிகள் பேரவை இவ் விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் கைதானோரை நாடுகடத்தும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. எனினும் இந்நடவடிக்கை குறித்து ஐ.நா சபை அகதிகள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவை மேற்கொள்ள தவறி விட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரஜைகள் 205 பேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் அகதிகளும் கைதுசெய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை கூறியுள்ளது.

சிங்கள மாணவர்கள் மத்தியில் பேசி நல்லுறவை நிலைநாட்டுவதாக அமைச்சர் வாசுதேவ கலாநிதி குமரகுரபரன் அவர்களிடம் உறுதியளிப்பு-

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் இந்த நாட்டில் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி பேசுவேன் நல்லுறவை நிலைநாட்டுவேன் என தன்னிடம் உறுதியளித்ததாக ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி குமரகுரபரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அப்பாவி தமிழ் சப்ரகமுவ பல்கலைக் கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புலி முத்திரை குத்த முனைய முயலும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்- அமைச்சர் வாசுதேவவிடம் குமரகுருபரன் கோரிக்கை.

புனர்வாழ்வு பெற்றவர்களும் க.பொ.த உயர்தரம் எழுதினார்கள் அவர்களும் பல்கலைக்கழகம் வந்தால் மீண்டும் புலி என் குற்றம் சுமத்தலாமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிச்சதாக அன்றோ இருக்கும். எதிர்கால நல்லெண்ணம் கருதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி உரையாடி சிங்கள தமிழ் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை புரிந்து கொண்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது – கலாநிதி குமரகுருபரன், தலைவர் ஜனநாயக தேசிய முன்னணி.  Read more

பிரித்தானிய துணைப் பிரதமரின் அறிவிப்பு-

imagesCA5L8U3Dஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குடிமக்கள் ஏழு வருடங்களின் பின்னர், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய துணைப் பிரதமர் நிக் கிலெக் இதனைக் கூறியுள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களுள்ளன. இந்நிலையில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான குடியேற்றம் குறித்த முக்கிய விவாதம் ஒன்று நேற்று இடம்பெற்றது. அதில் பங்கேற்ற துணைப் பிரதமர் நிக் கிலெக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில்; ஏழு வருடங்கள் குடியிருந்த ஒருவர், ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறவோ அல்லது தொழில் புரியவோ முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் நிக் கிலெக் கூட்டணி அரசில் பங்குபெற்றுள்ள லிபரல் டெமோகிராட்ஸ் என்ற இளைய கட்சியின் தலைவராவார்.

மீனவர் பிரச்சினைக்கு சிரத்தையுடன் செயற்பாடு – சுஷ்மா-

sushma suvarajஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சிரத்தையுடன் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ் தலைமையிலான குழு நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தது. இதன்போது இருநாட்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போதே சுஷ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பாரதிய ஜனதா கட்சி ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக தெரிவித்ததாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சை மாற்ற வலியுறுத்தல்-

பிரதமர் டி எம் ஜயரத்தினவிடம் இருந்து பௌத்த சாசன அமைச்சை மீள பெறவேண்டும் என பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவணா பலய கோரியுள்ளது. ராவணா பலய என்கின்ற மேற்படி அமைப்பின் இணைப்பாளர் ஹித்தாகந்தே சத்தா திஸ்ச இதனை தெரிவித்துள்ளார். மல்வத்த பீட மஹாநாயக்கரை இன்றையதினம் காலையில் சந்தித்த ஹித்தாகந்தே சத்தா திஸ்ச தான் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவின் பொலிஸ் மா அதிபர் இலங்கைக்கு விஜயம்-

maldives police chiefமாலைதீவின் பொலிஸ் மா அதிபர் ஹூசைன் வைட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். பொலிஸ் மா அதிபர் என் கே இலங்ககோன், சட்டம் மற்றும் சமாதன தொடர்பான அமைச்சின் செயலாளர் மேஜர்ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோரின் அழைப்பின்பேரிலேயே அவர் இலங்கை வரவுள்ளார். மாலைதீவு பொலிஸ் மா அதிபரை வரவேற்றும் நிகழ்வு நாளை மறுதினம் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்-

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள 2020 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்காக 2லட்சத்து 96ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேலும் பரீட்சை தொடர்பான மோசடிகள் இடம்பெறின் அது தொடர்பில் 1911 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 0112 784208 மற்றும் 0112 784537 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை-

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட மக்கள் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது எனவும் முதலமைச்சருக்கு இல்லை எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனித உரிமைகள் மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. சிறீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்றையதினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

வவுனியாவில் அடிகாயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வைரவப்புளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டைமாடியில் இருந்து அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் குறித்த வீட்டில் வசிப்பவர்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலீசார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமது வீட்டில் வேலைசெய்யும் மேற்படி நபர் நேற்றிரவு மதுபோதையில் வீதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்குப் பின்னர் தமது வீட்டின் மொட்டைமாடியில் வந்து உறங்கியதாகவும் தெரிவித்த அவர்கள், அதிகாலையில் பார்த்தபோது சடலமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் வத்தளையைச் சேர்ந்த 28வயதுடைய எஸ் சரவணன் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர்-

ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார். இறுதிக் கட்டப்போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் வெளிநாடுகளில் பல்வேறு நகரங்களில் நேரடியாக இடம்பெற்று சாட்சிகள் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் ஸ்கைப் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இலங்கையிலுள்ள காணாமற் போனோரின் உறவுகளும் நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாட்சியமளிப்பு இரகசியமாகவே மேற்கொள்ளப்படும். எப்போது சாட்சியமளிப்பு இடம்பெறும் என்பதைப் பற்றி எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்படாது என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முகமாலை மாணவன்மீது, தாக்குதல்;, சப்ரகமுவ பல்கலையின் பாதுகாப்பு அதிகரிப்பு-

சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில், மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இரவு நெடுநேரம் படித்துவிட்டு உறங்கச் சென்றிருந்த அந்த மாணவன் இடையில் கழிப்பறைக்குச் சென்றபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் காயமடைந்த மாணவன் தெரிவித்துள்ளார். மயக்கம் தெளிந்தபோது விடுதிக்கு வெளியே பற்றையொன்றில் தான் வீசப்பட்டு கிடந்ததாகவும் கழுத்தில் கயிறு ஒன்று இறுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த வேதனையோடு விடுதிக்குச் சென்றபோது சக மாணவர்கள் தன்னை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். Read more

சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் ஊடான பணிகள்-

வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்படட்ட சங்கானைப் பகுதியில் 320 இலட்சம் ரூபா செலவில் நெல்சிப்தி;ட்டம்மூலம் மீன்சந்தை அமைக்கும் ஆரம்பபணிகள் ஆரம்பமாகியுள்ளது. 2011ம் ஆண்டு முதலாக சங்கானை பகுதி பட்டிண அபிவிருத்திச் சபை மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலி மேற்கு பிரதேச சபையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய சந்தைக்கான தெரிவு பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சங்கானை பிரதேச பொது அமைப்புகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு மேற்படி சந்தைக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய அறிக்கையை தயார் செய்து அனுப்பினார். தொடர்ந்து சங்கானை பட்டின அபிவிருத்தி சபை மேற்கொண்ட முயற்சி காரணமாக பிரதேச சபைக்கு புதிய நிலம் மீன் சந்தை அமைப்பதற்கான நிலம் பிரதேச செயலகத்திற்கு பின் உள்ள பகுதியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதேவேளை மேற்படி மீன்சந்தை அமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி சந்தையை அமைக்காது இவ் நிதிமூலம் வீதிகளை செப்பனிடலாம் என கோரிக்கையையும் முன்வைத்து இப்பணிகளை முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இவ் சந்தை அமைப்பதன் வாயிலாக பெறப்படும் நிதி தொடர்ச்சியாக பிரதேச அபிவிருத்திக்கு பயன்படமுடியும் என்பதை கருத்தில்கொண்டு மேற்படி திட்டம் தவிசாளரால் முன்மொழியப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வியம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஓய்வுநிலை புவியியலாளர் சங்கானை பிரதேசத்தினை நகரமாக்கும் செயன்முறையின் முதல்கட்ட படிமுறையாக இவவிடயம் அமையும் என்றார்.

தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு-

யாழ். தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு மற்றும் தசரதன் செல்வன் இசை நாடகத்திற்கான அங்குராட்பண வைபவம் என்பன கடந்த 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கலாலய நிறுவனத்தின் தலைவர் மு.சடாற்சரம் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ .ஈ.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் வெளியீ;டு நிகழ்வில் ஆய்வுரையினi சங்கானை பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி நிரூபா.காசிநாதர் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை கலாலய நிறுவனத்தின் நெறியாளர் செ. உதயச்சந்திரன் வழ்ங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் நடிகர் குணபாலன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் நிறுவனத்தின் பெண் நடிகரை கௌரவித்து மலர்மாலை அணிவித்தார் இந்நிகழ்வில் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவகள் உரையாற்றும்போது- Read more

வலி மேற்கு பிரதேசசபை தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

01.08.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் வட்டுக்கோட்டை கண்ணகாம்பா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (கண்ணகை அம்மன் ஆலயத்தில்) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் மேற்படி ஆலய பரிபாலன சபைத் தலைவரும் சமூக சேவகருமான கலக் விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உரையாற்றும்போது, பிரதேச சபைத் தவிசாளரது சேவையைப்பாராட்டிய ஆலய பரிபாலன சபைத் தலைவர் பிரதேச சபைத் தவிசாளரது முயற்சியால் நாம் பல நன்மைகளை பெற்றுள்ளதாகவும் இதேவேளை தவிசாளர் தனது 6 மாத மாதாந்த கொடுப்பனவின் வாயிலாக ஆலய பூசகரது இல்லத்தினை புனரமைத்து வழங்கியமையையும் இவ் இடத்தில் குறிப்பிட்டு பாராட்டினார். இவ் நிகழ்வினைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகாணந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை மாதா ஆலயம் எனவும் அழைப்பர் இதேவேளை 01.08.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் தொல்புரம் பத்தானைகேணியடி வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை அடுத்துள்ள பகுதியில் யானைகள் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வலி மேற்கில் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு-

02 03 04 05 061யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 30.07.2014 புதன்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் ஊனமுற்ற நபர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்தவரும் நோர்வே நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் ஆலோசகரும், மனோதத்துவவியலாளரும், ஆசிரியையுமான அன்புமலர் இராஜசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு 50ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். மேற்படி கொடையாளர் இலங்கையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்றபோது நோர்வே நாட்டின் வாயிலாக பாதிக்கப்பட்ட அனைத்தின மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உதவித்திட்டம் வழங்குவது தொடர்பிலும் மேற்படி நிகழ்வின்போது ஆராயப்பட்டுள்ளது. 

வவுனியா ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்-

vavuniya oodakaviyalaalarukkuவவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உடனடியாக வவுனியா பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு இருவேறு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பை மேற்கொண்டுள்ள சந்தேகநபர்கள், தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம்மீது தாக்குதல்-

sri lankan airlines aluvalaham meethuஇந்தியா – தமிழகம் திருச்சியில் உள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம்மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை கண்டித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரையை பார்த்த பின்னர் தற்கொலைக்கு முயன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் மாவட்ட பெண்கள் அமைப்பு உறுப்பினரான விஜயலட்சுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகில் வரும் எவருக்கும் அவுஸ்திரேலியாவில் இடமில்லை-டோனி அபொட்-

சட்டவிரோதமாக படகில் வரும் எவருக்கும் தமது நாட்டில் இடமில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அகதிகள் 157 பேர் நவ்ரு தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை வலியுறுத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்டகாலம் இந்தியாவில் வசித்துவந்தவர்கள் என்பது தெரியவந்ததாகவும், அவர்களில் அநேகமானவர்களுக்கு இந்திய குடியுரிமை உள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை-சையிட் அக்பர்தீன்-

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார். ஒருநாட்டின் உள்விவகாரம் குறித்த சர்வதேசகுழு ஒன்று அத்துமீறி விசாரணை நடத்த முற்படக்கூடாது என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்தியா ஆலோசித்து தீர்மானம் மேற்கொள்ளும். எனினும் ஏற்கனவே இந்தியா அவர்களுக்கான வீசாவை நிராகரித்துள்ளதாக வெளியான செய்தி உறுதியானது இல்லை. எவ்வாறாயினும் இதுவரையில் அந்த குழு இந்தியாவிடம் வீசாவை கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர்களை இலங்கை சட்டவிரோதமாக நாடு கடத்துகிறது – ஐநா-

untitledபுகலிடம் கோரும் பாகிஸ்தானியர்களை இலங்கை அரசாங்கம் சட்டவிரோதமான ரீதியில் நாடு கடத்துவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யூ.என்.எச்.சீ.ஆர்) சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்நடவடிக்கையை இலங்கை கைவிட வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் 9ம் திகதிமுதல் இலங்கையில் புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 214 பாகிஸ்தானியர்களை இலங்கை அதிகாரிகள் கைதுசெய்துள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்துவது தடைசெய்யப்பட்ட ஓர் விடயமாகும். பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் நாடு கடத்தக்கூடாது. சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிம் கார்ட் பெற ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தல்-

உரியமுறையில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சில நிறுவனங்கள் சிம் கார்ட்களை விநியோகிக்கின்றன. எனவே சில குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு இவை வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகையால் இனிமேல் இவ்வாறு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம் கார்ட் விநியோகிப்போருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதாவது சிம்காட்கள் வாங்குவதற்கு வரும் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லையெனில் சில சிம்கார்ட் நிறுவன பிரதிநிதிகள் ஏற்கனவே சிம்கார்ட் வாங்கிய ஒருவரது தேசிய அடையாள அட்டை பிரதியை பயன்படுத்தி சிம்கார்ட்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் முறையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம்கார்ட்கள் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நியமனம்-

ul naaddu iraivari thinaikkalamஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை முதல், (01.08.2014) உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக ஆர்.எம்.ஆர்.டபிள்யூ. மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதித்திட்டமிடல் அமைச்சு இன்றையதினம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்பு-

siruvan kadaththalகடத்திச் செல்லப்பட்ட மீகலெவ – குணுபொலகம பிரதேச வியாபாரியின் 04 வயது மகன் இன்று மீட்கப்பட்டுள்ளார். டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மோடி, ஜெயலலிதாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியது- 

srilanka_apology_001சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், “நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?” என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.  சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே அரசாங்க வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை வெளியிட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில்,  “தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் நவுரு தீவுக்கு மாற்றம்-

tamil-asyl-04இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்களும் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 50 சிறார்கள் உள்ளடங்களாக அனைத்து அகதிகளும் நேற்று இரவு அவர்கள் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த அகதிகள் அனைவரும் முன்னர் கர்டீன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தி வந்தபோதிலும், இதற்கு அகதிகள் இணங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் இரவு மூன்று விமானங்களின் மூலம் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களின் பயணம் ஒத்திவைப்பு-

பத்து நாட்களுக்குள் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவு நோக்கிய ராமேஸ்வரம் மீனவர்களின் பயணம் தற்காலிகமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் வழங்கிய வாக்குறுதியை அடுத்து கச்சத்தீவு நோக்கியப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ள போதிலும் தமது வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாசன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை தொடர்பில் விளக்கம்-

கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட மீகலேப பகுதியைச் சேர்ந்த சிறுவன் தினிந்து யஷேன் ஏக்கநாயக்க இன்று கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார். சிறுவன் மீட்கப்பட்டமை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன பிள்ளை மீட்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளித்தார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று முன்தினம் இரவு விசாரணைகளை ஆரம்பித்து 24 மணித்தியாலங்களுக்குள் சிறுவன் மீட்கப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார். சிறுவனின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்தேகநபர் முல்தொட்டுவ, பகுதியில் நேற்றிரவு 8.30 அளவில் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால் குடிநீர் வழங்கும் வண்டி அன்பளிப்பு 

unnamed6சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கும் வண்டி கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.
பேராசிரியர் கா. குகபாலன் (இணைப்பாளர், வட இலங்கை சர்வோதயம்)திரு. கு.சந்திரா (கிராம அலுவலர், புங்குடுதீவு), செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்), செயலாளர், -வேலணை பிரதேச சபை, திரு.ச.ரமணதாஸ் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.
திரு.ச.ரமணதாஸ் அவர்களினால் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) மேற்படி குடிநீர் வழங்கும் வண்டி கையளிக்கப்பட்டு, செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) ஆகியோரினால் பொறுப்பேற்க்கப்பட்டது.
வெள்ளோட்டமாக புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

தகவல் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து

unnamed5unnamed3unnamed4unnamed7unnamed 1unnamed2unnamed

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தூதுவர் சந்திப்பு-

imagesஇந்தியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன சேனவிரத்னே (65) டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். அப்போது, இலங்கைத் தூதராக நியமிக்கப்ட்டுள்ளதற்கான ஆணையை அவர் பிரணாப் முகர்ஜியிடம் முறைப்படி நேற்று அளித்துள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைத் தூதுவர் மட்டுமின்றி, இஸ்ரேல், உருகுவே, கானா, லாவோ ஆகிய நாடுகளின் தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் தங்கள் நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கடத்தல் தொடர்பில் புலனாய்வு பிரிவினரும் விசாரணை-

siruvan kadaththalகுருநாகல் நிக்கவெரெட்டிய கடுகம்பொல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் நான்கு வயது மகனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் குழுக்கள் விசாரணை செய்துவரும் அதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை சிறுவன் வசித்து வந்த பிரதேசத்திற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வர்த்தகரின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வர்த்தகர் மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதேவேளை, குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா சென்ற பயணிகள் பஸ்மீது தாக்குதல்-

vavuniya sentra payanikal busகொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீது நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா டிப்போவுக்கு சொந்தமான பயணிகள் பஸ்மீதே புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 4ஆவது மைல்கல் பகுதியில் வைத்து மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் விபத்தில் படுகாயம்-

925635413accsi.Crash-Generic-300x225கிளிநொச்சி குடமுறுட்டி பாலத்தடியில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் வாகனம் குடை சாய்ந்ததில் வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரியில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் பூநகரி – பரந்தன் வீதி வழியாக வலயக் கல்விப் பணிமனைக்குத் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் பணிப்பாளர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சகோதரர்கள் கைது-

akkaraipatru thuppakki pirayokamஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, வெள்ள பாதுகாப்பு வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியக பிரதம இன்ஸ்பெக்டர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களை நேற்று கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை குற்றப்புலனாய்வுப் பணியக பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்களான இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை- ஹெல உறுமய-

ஏழு அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் தலைமையில் இதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜாதிக்க ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த குழுவினரால் தயாரிக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு சட்டம், அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு-

ilankaiyil aasia arasiyal katsikalinஆசிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில், ஆசிய வலயமைப்பை சேர்ந்த 33 நாடுகளின் அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.