பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்-

stststபாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் யாழ். மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலை மாணவர்களை நேற்று (19.03.2015) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களுடனும், வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடியும் உள்ளனர். இதேவேளை மேற்படி ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும், இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்;யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.