Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் பாடசாலை மைதானம் புனரமைப்பு-

IMG_8073தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மைதானம் நேற்று (20.03.2015) வெள்ளிக்கிழமை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சமளங்குளம் யுரேனஸ் கழகம் மற்றும் சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழக கட்டார் கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், பாடசாலை அதிபர் திரு. சிவானந்தன், பாடசாலை ஆசிரியர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், பொருளாளர் .த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், சமளங்குளம் யுரேனஸ் கழகத்தின் தலைவர் திரு.சிம்சுபன், அமைப்பாளர் ஜெயந்தன், உறுப்பினர்களான தனோஜன், விமர்சன், மற்றும், நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்பு மீறலல்ல-அமைச்சர் வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkதேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வதை தமிழ் இன­வா­த­மா­கவோ அல்­லது சிங்­கள இன­வா­த­மா­கவோ அர்த்­தப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டாம் என நேற்று சபையில் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாண­யக்­கார தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு மீறல் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரையாற்றும்போதே வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பின் தமிழ் மொழியாக்கத்தில் 205 ஆம் பக்­கத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்த தமிழ் மொழி பெயர்ப்பை 1940 களில் நல்­ல­தம்பி பண்­டிதர் செய்தார். அவ­ரது மொழிபெ­யர்ப்பில் சிங்­க­ளத்தில் இயற்­றப்­பட்ட தேசிய கீதத்தின் அர்த்தம் எது­வி­த­மான மாற்றமும் இல்­லாமல் அனைத்து சொற்­ப­தங்­களும் தமிழில் அமைந்­துள்­ளது. சிங்­க­ளத்தில் ஸ்ரீலங்கா நமோ மாதா என்றும் அதே­போன்று தமிழில் நமோ நமோ தாயே என்றும் ஒரு பொருளில் அர்த்­தத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லாது சிங்­கள இசை மெட்­டுக்கு ஏற்ற வகை­யி­லேயே தமி­ழிலும் உள்­ளது. எந்­த­வி­த­மான மாற்­றமும் கிடை­யாது. அது மட்­டு­மல்­லாது அர­சி­ய­ல­மைப்­பிலும் தமிழில் உள்­ளது. தமிழில் பாடு­வது அர­சியல் அமைப்பு மீறல் அல்ல. அது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தே­யாகும். தமிழ் மக்கள் பெரும்பான்­மை­யாக வாழும் பகு­தி­களில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம். அதேபோன்று சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் சிங்­க­ளத்­திலும் தேசிய கீதத்தை பாடலாம். பெரும்­பாலும் தேசிய நிகழ்ச்­சி­களில் சிங்­கள மொழி­யி­லேயே தேசிய கீதம் பாடப்­ப­டு­கின்­றது. நான் சமூக ஒரு­மைப்­பாடு அமைச்­ச­ராக அந்த ஆட்­சியில் இருந்த போது ஒரு யோச­னையை முன்­வைத்தேன். தென்­னா­பி­ரிக்­காவைப் போல் இலங்கையிலும் தேசிய கீதத்தை சிங்­கள தமிழ் சொற்­ப­தங்­களைக் கொண்டு சேர்த்து பாட வேண்டும் என. அப்­போது தேசிய கீதத்தில் இரண்டு மொழி­களும் கலந்து விடும். ஆனால் அது நிறை­வே­ற­வில்லை. ஜனா­தி­பதி சிங்­க­ளத்தில் உரை­யாற்றும் போது அந்த உரையை தமிழில் மொழி பெயர்க்கின்றோம். எனவே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்தல் கூடாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபூசிகா தாயாருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு-

porvikaபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது. புலி­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின்கீழ் கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மாரி பிணையில் விடு­விக்­கப்­பட்டபோதும் அவ­ரது மக­ளான விபு­சிகா நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமைய கிளி­நொச்­சியில், இயங்கிவரும் மகா­தேவா சைவச்­சி­றுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்தார் விபு­சி­காவை சிறுவர் இல்­லத்தில் இருந்து பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ரது தாயான ஜெயக்­கு­மாரி கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­காரி ஊடாக விண்­ணப்­பித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இம்­மனுமீதான விசா­ரணை நேற்று கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்­றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்­னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­யுடன் விபு­சிகா மற்றும் அவ­ரது தாயார் ஆகியோர் ஆய­ராகி இருந்தார். ஜெயக்­கு­மாரி சார்­பாக ஆய­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளான திரு­மதி. எஸ்.விஜ­ய­ராணி, ம.கிறே­சியன், சுந்­த­ரே­ச­சர்மா, துசி­யந்தி, றைகான், ஆகியோர் ஆய­ராகி குறித்த சிறு­மியை பெற்­றோ­ருடன் செல்­வ­தற்கு நீதி­மன்றம் அனு­ம­திக்க வேண்டும் என கோரி­யி­ருந்­தனர். அதன்­போது ஜெயக்­கு­மா­ரியும் அவ­ரது மக­ளான விபு­சி­காவும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர் என பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அத்­துடன் சந்­தேகநபர்­க­ளாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­லேயே குறித்த சிறுமி சிறுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது. இத­னை­ய­டுத்து விபு­சிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் சந்ராநந்த காலமானார்-

chandruமுன்னாள் தேர்தல் ஆணையாளர் ஆர்.கே. சந்ராநந்த டி சில்வா காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமது 78வயதில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 1982ம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி இலங்கையின் தேர்தல் ஆணையாளராக பதவி ஏற்றார். அவர் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கான இலங்கையின் தூதுவராகவும் செயற்பட்டிருந்தார். 

பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்-

stststபாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் யாழ். மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலை மாணவர்களை நேற்று (19.03.2015) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களுடனும், வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடியும் உள்ளனர். இதேவேளை மேற்படி ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும், இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்;யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்ததைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்-

elalai mayilankaduயாழ் மயிலங்காடு ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும் இதனுடன் தொடர்புடைய விசமிகளைக் கைது செய்யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனப் பேரணியானது மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் ஆரம்பமாகி சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரத்தை அடைந்தது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி. பிரகாஸ் எதிர்க்கட்சி உறுப்பினர் அரிகரன் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் கஜேந்திரன் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த செந்திவேல் தமிழ் அழகன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், மாணவர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்ய வேண்டும். இந்த செயலானது பாடசாலைப் பிள்ளைகளுக்கெதிரான ஒரு மிகப்பெரிய தீய செயலாகும். எனவே விசமிகளை உடனடியாக கைதுசெய்வதற்கு முழுமையான நடவடி;கை எடுக்க வேண்டும் என கோசமெழுப்பியதுடன், நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுப்பிடி போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கி இருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.

சொந்த நிலத்தைப் பார்வையிடச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்-

fffffffffஉயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து சென்றிருந்தனர். ஆனால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட குறிப்பிட்ட பிரதேசத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான பிரதேசம் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரால் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்றைய தினம் தோலகட்டி, வடமுனை, தென்முனை மற்றும் ஒட்டகப்புலம் எனும் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒட்டகப்புலத்தில் ஒரு பகுதியே மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது, ஏனைய பிரதேசம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமது சொந்த நிலங்களை 25 வருடத்திற்கு பின்னர் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்-

aarpattamமட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடந்த 5 நாட்களுக்காக உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக தமக்கு வேதனம் தரப்படவில்லை என்று தெரிவித்து சுமார் 150 நிரந்தர பணியாளர்களும் 70 தற்காலிக பணியாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதியன்று தமக்குரிய வேதனம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் இதனையடுத்து 31 ஆம் திகதியன்று அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் தமக்கு வேதனம் வழங்கப்படும்வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்

ஜனாதிபதிக்கு வியட்நாம் அழைப்பு-

presidentஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. வியட்நாம் தூதுவர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி, சுற்றுலா மற்றும் சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. மேலும் இதன்போது வியட்நாம் அரசாங்கத்தால் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையரை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு தடை-

britishஇலங்கைத்தமிழர் ஒருவரை நாடுகடத்தும் திட்டத்தை பிரித்தானிய நீதிமன்றம் இறுதி நேரத்தில் தடை செய்துள்ளது. பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. 36வயதான கண்ணன் காளிமுத்து என்பவர் புலிகளில் காவற்துறை அதிகாரியாக செயற்பட்டதாகவும், இலங்கையில் அச்சுறுத்தலை சந்தித்ததை அடுத்து அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமது நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பிரித்தானியாவில் இரு தடவைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள கோன்ப்ரூக் அகதி முகாமில் அதி உச்ச கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் நாடு கடத்தப்படவிருந்தார். எனினும் அவரின் மனநிலை கருதி அவரை நாடுகடத்தக் கூடாது என அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில், இங்கிலாந்தின் நீதிமன்றம் அவரது நாடு கடத்தல்; திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நவுறுதீவில் அகதிகள் ஆர்ப்பாட்டம்-

Australia-asylum-newஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறுதீவின் அகதி முகாமில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த முகாமின் அதிகாரிகள், நவுறுதீவின் குடிமக்கள் மற்றும் அகதிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஒன்று உருவாகி இருந்தது. இதன்போது அகதிகள் சிலர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் சிலர் கடும் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

காணாமற் போனோர் ஆணைக்குழுவின் அம்பாறை அமர்வு-

missingகாணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 6ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார். சாட்சி விசாரணைகள் நடைபெறவுள்ள நான்கு நாட்களிலும் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் வீதம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். இதனை முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை சந்தித்து ஆணைக்குழுவின் அமர்வுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா  நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள் இணைப்பு)

Nelukkulam04வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா வலயக் கல்விப் பணிமனை பொறியியலாளர் திரு.கு.சிவகுமாரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகரசபை உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஆரம்ப கல்வி  ஆசிரிய ஆலோசகர் திருமதி.எம்.தேவசேனா, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ப.தர்மலிங்கம் அவர்களும் பாடசாலை மாணவர்கள், ஆசரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி தொடர்ந்து  மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. Read more

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்.

srilankaஇலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இலங்கை தேசிய கீதத்தை மீண்டும் தமிழில் பாடலாம் என்ற இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் வடிவமைக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் அவரவர் அதனைப் பாடி வந்துள்ளனர். இருந்தபோதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள், தேசிய கீதத்தில் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்காத ஒரு போக்கு தொடர்ந்து நிலவுகின்றது. இன ரீதியாகத் தாங்கள் ஒடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த உணர்வுக்கு அவர்கள் ஆளாகியிருந்ததாகப் பலரும் கூறுகின்றனர்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு  ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் இந்த நிலையில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என புதிய ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சில சிறுகட்சிகள் கலந்துரையாடல்

chiru kadchikalகொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் 17.03.15 இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சிறுகட்சிகளின் நிலைப்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், தேர்தல் மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் எடுக்கக் கூடிய இறுதித்தீர்மானங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பா.உ. முருகேசு சந்திரகுமார், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, உபசெயலாளர் நிஸாம் காரியப்பர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், றிசாட் பதியூதீன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பா.உ. சுனில் ஹந்துன்நெத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் நவசமசமாசக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த கலந்துரையாடலொன்று 16.03.15 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகளை எதிர்வரும் ஒருவாரத்திற்குள் தமக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடமும் பணிப்புரை விடுத்தார். மேற்படி கலந்துரையாடலிலும் ஈபிடிபி கலந்துகொண்டிருந்தது.

துனீஷிய அருங்காட்சியகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் 

tunisBBimcTNதுனிஷியாவின் தலைநகர் ட்யுனீஷ் நகரில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பார்தோ அருங்காட்சியகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஏ.கே ரக துப்பாகிகளை வைத்து தாக்குதலை நடத்தியதாகவும்.
அருங்காட்சியகத்திலிருந்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், சிலர் இன்னும் உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் அருங்காட்சிகத்தினுள் நுழைந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பழங்காலக் கலைபொருட்கள் நிறைந்த அந்த அருங்காட்சியகம் ட்யூனிஷ் நகரில் சுற்றுலாப் பயணிகள் தேடிவரும் இடமாக இருந்துவந்தது.
அருகில் உள்ள லிபியாவில் நிலைமை ஸ்திரமின்றிக் காணப்படுவதால், துனீஷியாவிலும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.  பல ஆயிரம் இளைஞர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான துனீஷியர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் சண்டையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பினால், இங்கும் தாக்குதலை நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. பெரிதும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் அந்த நாட்டுக்கு இந்த தாக்குதல் பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகின்றது.

 

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை மீளாய்வு

mangalaதமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் (டயஸ்போரா) மீதான தடைகள் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த அமைப்பிலுள்ள பலர், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த அமைப்புக்களை தேசிய நல்லிணக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று குறிப்பிட்ட அவர் இதிலுள்ள பலர், இலங்கைக்கு பெருமையைத் தேடி தந்த பல்துறை நிபுணர்களாகவும் கலை மற்றும் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சிறையிலிருந்த 43 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்

sri &indiaகோடியக்கரைக்கு தென்கிழக்கே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மீன்பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 86 மீனவர்களையும், இவர்களது 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களை இரு பிரிவாக்கி வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இவர்களில் முதல்கட்டமாக 43 மீனவர்கள் நீதிமன்றத்தால் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது கட்டமாக எஞ்சிய  நாகையை சேர்ந்த  21 பேரும், காரைக்காலை சேர்ந்த 22 பேரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய கடலோரக் காவல்படையினர் புதன்கிழமை காலை காரைக்கால் துறைமுகத்துக்கு இவர்களை கப்பலில் அழைத்துசென்று கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், மீனவர்களிடம் விசாரணை நடத்தி அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

வடஇலங்கையில் 5500 வீடுகள் கட்டுவதாக சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் அறிவிப்பு

swiss_envoy nocreditஇலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை பயனாளிகளுக்குக் கையளித்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தூதுவர் ஹின்ஸ் வோக்கர், சுவிஸ் வெளிவிவகார திணைக்களததின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகத்தின் தலைவரும், அந்த நாட்டின் இராஜாங்க செயலாளருமாகிய ஜோஹனஸ் மெட்டியாசி மற்றும் முக்கியஸ்தர்களும் சுவிஸ் வெளியுறவு அமைச்சருடன் வருகை தந்திருந்தனர். Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ORHAN மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

TYNCதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு.முத்தையா கண்ணதாசன் அவர்களின் செல்வப்புதல்வி அட்சயா அவர்களின் 16வது பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தை (ORHAN) சேர்ந்த மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (16.03) விசேட  மதிய உணவு வழங்கப்பட்டது. Read more

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய சம்பள உயர்வு ஏன்?

ECONOMIC DEVELOPMENT ORGANISATION OF SRI LANKA- EDOS

இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஈடோஸ்

   59/2, Temple Road, Maskeliya.

      Phone No: 072 5316735 , 0777 560863       e-mail: edoscmb@yahoo.com

15.03.2015

200 வருட கால மலையகத் தோட்டத் தொழிலாளர்களின்  வாழ்க்கையில், அந்த மக்களின் முன்னோர்களும், தற்போது அவர்களும் அனுபவித்த, அனுபவித்துக்கொணடிருக்கும் துன்ப துயரங்களை எவரும் இதுவரை புரிந்து கொணடதாக தெரியவில்லை. காடாக இருந்த இந்த நாட்டை செழிப்பான அழகான தேசமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, தரம் வாய்ந்த தேயிலையை உலகிற்கு உற்பத்தி செய்து காட்டி, அதன் மூலம் சர்வதேசத்திற்கு இலங்கையை அறிமுகப்படுத்திவிட்டு, கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெய்யிலிலும்  நாட்டுக்காக அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம். இவைகளை எண்ணிப்  பாராமல் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தில் நிபந்தனைகளை விதித்து அவர்களின் வயிற்றில் அடிப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. Read more