Header image alt text

கருணாரத்ன பரணவிதாரன பிரதியமைச்சராக பதவியேற்பு-

paranawithanaபாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கருணாரத்ன பரணவிதாரன உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகிறார். பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றி வருகிறார்.

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். இன்றுகாலை 9 மணியளவில் அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காகவே கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை முன்னாள் கடற்படை அதிகாரிகள் நால்வரும் ஆணைக்குழு முன் இன்று ஆஜராகியுள்ளனர்.

கடற்படை வாகனம் மோதி மாணவி மரணம்-

accidentகடற்படையினர் கெப் ரக வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேலணை பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் (வயது10) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இம் மாணவி வேலணை நடராஜா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி கற்று வருகின்றார். இன்றுகாலை படசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தவேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவிமீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லும்போது மாணவி உயிரிழந்துள்ளார். மாணவி மீது மோதிய கடற்படைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் இராமநாதன் சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலணை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாஜூதீனின் மரணம்; படுகொலை என விசாரணை அறிக்கை-

tajudeenபிரபல றகர் வீரர் மொஹமட் வசீம் தாஜூதீனின் மரணம், விபத்தொன்றினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் அவருடைய இறுதியான மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கை, நீதிமன்றத்தில் நேற்று கையளிக்கப்பட்டது. குறித்த சம்பவம் இடம்பெற்றபோது தாஜூதீனின், அந்த வாகனத்தை செலுத்தவில்லை என்றும் கொலைச்செய்யப்பட்டன் பின்னர் அவருடைய சடலம், அந்த காரின் சாரதி ஆசனத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. தாஜூதீனின் கழுத்து, பாதங்கள் மற்றும் நெஞ்சு ஆகிய இடங்களில் கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டிய பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி கைது-

policeகொழும்பு, நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்து அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுகதபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எம்.ஜீ.யூ.டி குணதிலக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு சாதாரண பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டார். இதன்பின்னர் பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.ஜீ. பிரசன்ன நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எம்.ஜீ.யூ.டி குணதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இராணுவவீரர் தற்கொலை-

suicideவவுனியா, மஹகச்சிகொடிய, 83வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரமொன்றில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதுடைய சிலாபம், குமாரஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை காங்கேசன்துறையில் 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று படையினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்பவர் காது அறுபட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலஞ்ச, ஊழல் தொடர்பில் சுமார் 12 மில்லியன் முறைப்பாடுகள்-

briberyஇலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையகத்துக்கு சுமார் 12மில்லியன் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, அது தொடர்பான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ‘இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் கபே அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு யாழ். பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், ‘மக்கள், ஆணைக்குழுமீது வைத்த நம்பிக்கை காரணமாக இவ்வளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. எங்கள் நாட்டில் தற்பொழுது அதிகமாக பேசப்படும் விடயமாக இலஞ்சம் மற்றும் ஊழல் காணப்படுகின்றது. இவை இல்லாத சமூதாயத்தை எவ்வாறு கட்டியெழுப்புதல் என்பது இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது’ என்றார். Read more

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இரகசிய முகாம்களில்லை-அமைச்சர் மங்கள-

mangalaபயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தடுப்பு முகாம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாவது,

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பில் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்தமை தொடர்பிலான சம்பவங்கள் 14 எமக்கு பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மிகவும் நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. பயங்கரவாத தடுப்பு சட்டம் மிகவும் மோசமான சட்டமென ஐக்கிய நாடுகள் சபையில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறப்பட்டது. அவர்கள் எந்த விடயத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை நீக்கி அவர்களை விடுவிக்க வேண்டும்.
Read more