Header image alt text

சேர் பொன்னபம்பலம் இராமநாதன் அவர்களின் சிரார்த்ததினம்-(படங்கள் இணைப்பு)

20151130_170028_resizedசேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் சிரார்த்ததின நிகழ்வு பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகாமையில் இன்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் மற்றும் கொழும்பு விவேகானந்த சபையின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர். அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் சேர் பொன் இராமநாதன் அவர்களைப் பற்றி உரைநிகழ்த்தினார்கள்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலங்கையிலே முதன்முதலாக பெண்களுக்கான இந்து பாடசாலையாக யாழ் இராமநாதன் பெண்கள் கல்லூரியையும், அதேநேரம் ஆண்களுக்காக யாழ். பரமேஸ்வராக் கல்லூரியையும் 1813ல் ஆரம்பித்தார். Read more

அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம்-

courtsபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நீதிமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிள் வழக்குகள் தொடர்பில் இந்த விசேட நீதிமன்றத்தினூடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 12 அமையப்பெற்றுள்ள நீதிமன்ற கட்டட தொகுதியில் இந்த விசேட மேல் நீதிமன்றம் இயங்கவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில் ஆர்ப்பாட்டம்-

arpattamமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை-வாசுதேவ-

vasuஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என இடதுசாரிக் கட்சிகளிடையே பொதுக் கருத்து காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை றேமகொண்டிருந்தன. இதன்போது கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவர்களது நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை குறித்த கருத்தை கைவிட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் எனினும் அவர்கள் தேசிய ஐக்கியத்திற்கு அத்தியவாரம் இடத் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயற்சி-

australiaசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இவரது புகழிடக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கீழே இறக்கப்பட்டுள்ளதோடு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இவர் ஆரன் மயில்வாகனம் எனும் 30 வயதுiடையவராவார். .

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் இல்லை – ஜனாதிபதி-

maithriநாட்டிற்கு அதிகளவு அன்பு செலுத்தும் தாம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பிரான்ஸில் நடைபெற்ற பிரான்ஸில் வாழும் இலங்கையர் ஒன்று கூடல் நிகழ்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று ஐக்கிய நாடுகளின் 2015 உலக காலநிலை மாநாடு பிரான்ஸ் நகரில் ஆரம்பமாக உள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் விஷேட விரிவுரை ஒன்றை ஆற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புகையிரதம் இறக்குமதி செய்ய நடவடிக்கை-

trainஇந்தியக் கடன் திட்டத்தின் கீழ் புகையிரத திணைக்களத்திற்கு புகையிரத இயந்திரம், புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி மற்றும் பாதை அமைப்பதற்கு அமைச்சரவைக்கு இரண்டு அமைச்சரவை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரதப் பெட்டிகளில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து எஸ் 11 வகை புகையிரதப் பெட்டிகள் அடங்கிய 20 புகையிரதங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட போதிலும் இதற்கு முன் சேவையில் இருந்த பெட்டிகளை விட அதில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பில் இரு சடலங்கள் மீட்பு-

dead.bodyகொழும்பின் வௌ;வேறு பகுதிகளிலிருந்து, இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேர வாவி மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றிலிருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்களை அடையாளம் காண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டத்தரிப்பு பகுதியில் தாச்சி விளையாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

P1060375யாழ். பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியில் யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் ஏற்பாட்டில் தாச்சி விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ். சிறீதரன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கள விழக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரான்ஸ் விஜயம்-

maithri24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மோல்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தபின் பிரான்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த மாநாடானது பிரான்ஸின் லி பொர்கேர்டில் நகரில் நாளை முதல் டிசம்பர் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஐ.நா பொதுச் செயலர் பான்கீமூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

al hussainஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அவரது இலங்கைக்கான மேற்படி விஜயம் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெறவிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களால் அவருடைய இந்த விஜயம் பிற்போடப்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

மட்டு.போதனா வைத்தியசாலையில் 52,349 குழந்தைகள் பிறப்பு-

child birthகடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 52349 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தயசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு குழந்தைகள் பிறந்துள்ளன. சாதாரண பிரசவத்தினூடாக 34207 குழந்தைகுளும், சத்திர சிகிச்சையூடாக 15454 குழந்தைகளும், ஆயுதங்கள் பாவித்து 2488 குழந்தைகளும் பிறந்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 2011ம் ஆண்டு 11206 குழந்தைகளும், 2012ம் ஆண்டு 9674 குழந்தைகளும், 2013ம் ஆண்டு 13432குழந்தைகளும், கடந்த ஆண்டு 12103 குழந்தைகளும் பிறந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைப் பிரசவித்திற்கான 46388 தாய்மார்கள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் பாராட்டு-

australia canadaஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மோல்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின்போது கனடா மற்றும் அவுஸ்திரேலியா பிரதமர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின்போது புதிய அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பி்ன்னர் அனைத்து இனங்களிடையேயும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டஙக்ள் குறித்து அதிக அவதானத்துடன் உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இதன்போது கூறியுள்ளார். Read more

தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உரியமுறையில் பயன்படுத்தி மாணவர்கள் தங்களையும் சமூகத்தையும் வளர்க்க வேண்டும்-த.சித்தார்த்தன் (பா.உ)-(படங்கள் இணைப்பு)

20151126_090640_resizedயாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லு{ரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒன்று 26.11.2015 காலை 9மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்டான் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உடுவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுலகுமார், வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகி|யோரரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், உடுவில் கோட்டத்திலே இத்தகைய ஆய்வுகூடம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. பெருந்தொகையான நிதிச் செலவில் இந்த ஆய்வுகூடம் திறந்தப்பட்டிருக்கின்றது. இதிலே 60 கணினிகளும் மொழிக்கான, கணிதத்திற்கான ஆய்வுகூடங்களும் இருக்கின்றன. இவைகளை சரியான முறையிலே மாணவர்கள் பயன்படுத்தி தங்களுடைய அறிவினை விருத்திசெய்து கொள்ளவேண்டும். Read more

காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்-

jaffnaகாணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள்? என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புலிகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறியவர்கள்-மங்கள-

mangala samaraweeraதமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மாறாக அவர்கள் வன்முறைகளிலேயே ஈடுபட்டிருந்தனர். பொதுநலவாய நாடுகள் மத்தியில் காணப்படுகின்ற இனவாதம், வன்முறையுடன் கூடிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் என்பவற்றை தடுப்பதற்கு, பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கின்றது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தத்திகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானியா நிதியுதவி-

britishயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மோல்ட்டாவில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் கெம்ரன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலே நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த நிதி பிரித்தானியாவால் வழங்கப்படவுள்ளது. யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சார்பில் நிற்பதற்கு பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நிதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுநலவாய அமைப்பிற்கு முதலாவது பெண் செயலாளர் நியமனம்-

common wealthமொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ரயில் மிதிபலகையில் பயணிக்கத் தடை-

trainஎதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தடைவிதித்துள்ளது. ரயில்வே கட்டளைச் சட்டத்தின் கீழ், மிதிபலகையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது-

kopuramநீர்கொழும்பு கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் இன்று அதிகாலை 2 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது. இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த கோபுரம்; புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களால் 2503 பேர் உயிரிழப்பு-

accidentவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 2503 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் 2326 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற 2037 வாகன விபத்துகளில் 2193 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகிய மரணங்களை விட இந்த வருடத்தில் 310 மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த வருடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார். ஆயினும் கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து அதிக வேகம் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, வாகன விபத்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

indian armyஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐந்து நாட்கள் விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அமைதிப்படையில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படலாம் எனவும் நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது என்றார்.

சிதம்பரபுரம் மக்களுக்கு வட மாகாண சபையால் உலருணவு உதவிகள்-(படங்கள் இணைப்பு)

565656555‪‎வட‬ மாகாண சபை விவசாய அமைச்சின் நிதி உதவியிலிருந்து சிதம்பரபுரம் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அப்பகுதி‬ பொது அமைப்புக்களின் அழைப்பின்பேரில் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை 22.11.2015 அன்று பார்வையிட்டபோது அம்மக்களின் உடனடி தேவையாக உலருணவுப் பொருட்கள் தேவைப்பட்டது. வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், நடராஜ், இ.இந்திரராஜா ஆகியோருடன் கலந்துரையாடி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியதுடன் விவசாய அமைச்சின் நிதி உதவியுடன் சிதம்பரபுரம் கிராமம், சிதம்பரபுரம் முகாம், பழைய கற்குளம் போன்ற மக்களுக்கு 24.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் மற்றும் அக் கிராமங்களின் பொது அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
Read more

வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரணதண்டனை விதிப்பு-

vas gunawardenaபிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார். அத்துடன் வாஸ் குணவர்த்தனவின் மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்கள் ஆகிய ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மொஹமட் சியாமை கொலை செய்தமை, அதற்கு சதித் திட்டம் தீட்டியமை, கடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் இவர்களுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி அறிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த ஆறு பேரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது. இதன்படி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட்ட 06 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லலித் ஜயசூரிய, சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

மாணவனின் மரணத்தையிட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்-கூட்டமைப்பு-

tna (4)18 வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம், பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வயது மாணவனின் இந்த செயல், சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயம். அதற்காக அவரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை. எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் ஒற்றுமையாக தெரிவிப்போம், பகிர்ந்து கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சும்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயரில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்-வியாழேந்திரன் எம்.பி-

viyalendranஅரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் பிழைகள் எதனையும் செய்யவில்லை என நான் கூறவில்லை. எனினும் அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை விடவும் அதிகளவு தண்டனையை அனுபவித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மீனவர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித நலன்களும் வழங்கப்படவில்லை. அரச ஊழியர்களின் சம்பளங்கள் வருடாந்தம் 2000 ரூபாவிலேனும் அதிகரிக்கப்பட வேண்டும். மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கல்விக்காக கூடியளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. அதில் வடக்கு கிழக்கின் கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோருகின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு-

kiriyellaஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டதில் ஒன்றிணைந்த எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை அரசாங்கத்திற்கு நல்கவேண்டும். எதிர்வரும் 6மாதங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.

25 இலட்சம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது-

arrest (30)25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொ{ஹவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டா மாநாட்டில் உரை-

maithri24வது பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பங்குகொள்வதற்காக மோல்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் அவர் உரையாற்றவுள்ளார். 24வது பொதுநலவாய நாடுகளின் மாநாடு மோல்டாவில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும், பொதுநலவாய மாநாட்டின் அமர்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மோல்டாவின் வெலேடா நகரில் இடம்பெறுகின்றது.

முதலாம் வட்டாரம் முள்ளியவளையில் பனைவிதை நடுகை-(படங்கள் இணைப்பு)

IMG_3205முல்லைத்தீவு மாவட்டம், முதலாம் வட்டாரம், முள்ளியவளை பொதுநோக்கு மண்டபத்தில் பனை விதைகளை நடுகின்ற நகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன்(பவன்) ஆகியோரும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவி ஆணையாளர், பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொன்நகர் முள்ளியவளை மக்களுக்கு நிவாரணம்-(படங்கள் இணைப்பு)

IMG_3169முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்நகர் முள்ளியவளையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் அவர்களுக்கான உலருணவு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களுடைய மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
Read more