Header image alt text

சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)

008aயா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் 17.11.2015 அன்று புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களினால் பாடசாலை அதிபர் திருமதி சத்தியபாமா தர்மேந்திரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாகவும், பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்குமுகமாகவும் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள யாஃபுங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய பாடசாலை திருத்த வேலைக்காக (பாடசாலை கூரை, முகட்டோடு மாற்றுதல், மின்சார உபகரணங்கள் மாற்றுதல் ரூ திருத்த வேலைகள் மற்றும் ஹரிதாஸ் நிறுவனத்தால் அமைத்துக் கொடுத்த மழைநீர் தொட்டியின் திருத்த வேலைகள் போன்றவைக்கு) சிறியதோர் நிதிப் பங்களிப்புச் செய்யப்பட்டது.
Read more

புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்-

sri lankaஇலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரியாணி விஜயசேகர அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான தூதுவராக கருணாசேன கொடிதுவக்கும், இத்தாலிக்கான தூதுவராக டீ.எஸ்.எல்.பெல்பொல ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தோனேஷியாவுக்கான உயர்ஸ்தானிகராக தர்ஷன பெரேராவும், ஜோர்தான் தூதுவராக ஏ.எல்.எம்.லபீரும், மியன்மார் தூதுவராக கே.டப்ளியூ.எம்.டீ.கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சவுதி அரேபியத் தூதுவராக ஏ.எம்.தஷீமும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராக சுனில் டீ சில்வாவும், சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்னவும், துருக்கிக்கான தூதுவராக சீ.எம்.அன்சாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான தூதுவராக எஸ்.ஜே.மொஹைடீன் தேர்தவு செய்யப்பட்டுள்ளதோடு பலஸ்தீன் தூதுவராக எம்.எஸ்.அன்வர் தெரிவாகியுள்ளார்.

வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் இராஜினாமா-

npc2_CIவடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, அவரது இடத்துக்குப் பதிலாக அகிலதாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்து பதவி விலகச் சொன்னதாகக் கூறி, அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர். அங்கஜன் விளக்கம் கோரியுள்ளதுடன் அகிலதாசின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்-

ravanaதற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இராவண பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு குறிப்பாணை ஒன்றை கையளித்துள்ளது. இதில் இராவண பலய அமைப்பினரும் இது தொடர்பாக செயற்படும் 100க்கும் அதிகமாக தேரர்களும் கூடியிருந்தனர். அரசியல் கைதிகளை விடுவித்தால் நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகக்கூடும் என இதில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொது செயளாலர் வண. இத்னேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசராக சித்திரசிறியை நியமிக்க அனுமதி-

courts (2)உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சபை இன்றுகாலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த கே.டி.சித்திரசிறி உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகள் காட்டிக் கொடுத்தன-

sfdfdfdfதிருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அக்குழுவினர், நாட்டில் 10 நாட்கள் தங்கியிருந்தனர். அக்குழுவினர், கொழும்பு, மாத்தளை, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருக்கோணமலை உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துள்ளனர்.
Read more