Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமந்தா பவர் சந்தித்துப் பேச்சு-

samantha tnaஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சிகைள் மற்றும் மீள்குடியேற்றம் என்பன தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்-மலேசிய எதிர்க்கட்சிகள்-

modiஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மலேஷிய தலைநகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம் இலங்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மேம்படுவதற்கு இந்தியா அழுத்தம் விடுக்க வேண்டும் என மலேஷிய எதிர்கட்சிகள் இதன்போது வலியுறுத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இதயசுத்தியுடன் நிறைவேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அதனை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமு எனவும் மலேஷிய தலைவர்கள் கோரியுள்ளனர். அத்துடன் நீண்டகாலமாக சிறைச்சாலையில் வாடும் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பிலும் மோடியிடம் விவாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.எல்.பீரிஸ் மீது நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு விசாரணை-

GL peerisமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணை பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 1மணியளவில் முன்னாள் அமைச்சர் விசாரணை பிரிவிற்கு ஆஜராகியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான நேரடி பஸ்-

busதிருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. சேருவிலையில் முற்பகல் 11 மணிக்கு தயாராகும் பஸ் மூதூரிலிருந்து நண்பகல் 12 மணிக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென்று இலங்கை போக்குவரத்து சபையின் மூதூர் சாலை முகாமையாளர் ஏ.எல் நௌபீர் குறிப்பிட்டிருந்தார். மேலும் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நண்பகல் 01 மணிக்கு மூதூருக்கான பஸ் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். 350 ரூபா போக்குவரத்து கட்டணத்துடன் சாதாரண சேவை இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தோழர் சுப்புவுக்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)

P1110231தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதி தோழர்களால் அமரர் தோழர் சுப்புவுக்கு தோழர் சின்னக்குமார் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் சுழிபுரம் பகுதியில் கடந்த (08.11.2015) அன்றுமாலை நடைபெற்றது. முன்னதாக இவ் நிகழ்வின்போது தோழர் சின்னக்குமார் அவர்கள் அமரர் தோழர் சுப்புவின் திருவுருவப்படடத்திறற்கு மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து ஏனைய கழகத்தின் மூத்த தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வின் பின்னர் அஞ்சலி உரையினை தோழர் ஜெகநாதன் (ஜேர்மனி), புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாhளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தொலைபேசி ஊhக இரங்கல் உரையினை நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் அமரர் தோழர் சுப்புவின் நினைவாக சுழிபுரம் பகுதியில் தோழர் அன்டனி அவர்களின் தலைமையின்கீழ் 500பனை விதைகள் நாட்டத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. Read more

சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-

samantha_maiththiri_001ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர், இதனை ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகுமென குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்ததாகும். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை பாராட்டுகின்றேன். அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகமின்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட தூதுவர், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியுமெனத் தெரிவித்தார். இலங்கையின் புதிய வேலைத்திட்டம் பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
Read more