Header image alt text

இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு, நிறுவனர் நினைவு, மெய்யொளி நூல் வெளியீட்டு நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

20151125_092717_resizedயாழ். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவுநாளும், மெய்யொளி நூல் வெளியீடும் இன்றுகாலை 9மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. அ.இரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ந.ஈஸ்வரநாதன் (கோட்டக்கல்வி அதிகாரி தெல்லிப்பளை) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது வணபிதா யேசுதாஸ்(இளவாலை சென்ற் ஹென்ரீஸ் பாடசாலை அதிபர்), பாலச்சந்திரக் குருக்கள் ஆகியோரை ஆசியுரையினை வழங்கினார்கள். தொடர்ந்து திரு.சுதர்சன் (ஊர்காவற்றுறை பிரதேசசபை செயலாளர்), திரு.ரிஷாந்தன் (முகாமைத்துவ உதவியாளர்) பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதன்போது பாடசாலைப் பி;ள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more

மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151125_130755_resized_1யாழ். மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. மணிவண்ணன் அவர்களது தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிரஞ்சலா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது பாடசாலைப் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது.

இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,  மாரீசன்கூடல் என்பது ஒரு மிகவும் பின்தங்கிய கிராமமாகும். வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளே கூடுதலாக இக்கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். அவ்வாறான ஒரு பாடசாலையில் இருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளில் சிலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடையாமைக்கு முக்கிய காரணம் யாதெனில் அந்தப் பிள்ளைகளுக்கு பரீட்சைக்கான கேள்விகளை வாசித்து கிரகித்து அதனை விளங்கிக் கொள்ளும் அறிவு போதாமல் இருக்கின்றமையே என்பதை பல கல்வியதிகாரிகள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள் என்பதுடன், பல பாடசாலைகளுக்குச் செல்வதால் என்னாலும் அதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நிவாரணம்-(படங்கள் இணைப்பு)

photo 2 (3)முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் அவர்களுக்கான உலருணவு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களுடைய மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
Read more