Header image alt text

துயர் பகிர்கின்றோம்!!!

அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு)

suppuபுங்கை நகர் ஈன்றெடுத்த
புனிதமான மைந்தனே!
கழகம் கண்டெடுத்த
கண்ணியமான தோழனே! எம் இனிய சுப்புவே!
கடந்து சென்ற நாட்கள் தொடக்கம்
நகர்ந்து செல்லும் இந் நாழிகை வரை
நம் தேசத்தின் விடுதலைக்கு…
எம் மக்களின் விடிவிற்கு…
“புதிய பாதை” ஒன்றே
பொருத்தமானதெனத் தேர்ந்து
ஆரம்ப நாட்களிலேயே
கழகத்தில் இணைந்து கொண்ட
எம்மருமைத் தோழரே! Read more

எமது கண்ணீர் அஞ்சலிகள்

கார்த்திகேசு சிவகுமாரன் (09-04-1956 – 09-11-2015)

suppuமரணத்துடன் உன் வாழ்வு முற்றுப்பெறுவதில்லை. உன் நினைவுகள் என்றென்றும்  உன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும்.

சுப்பர் என்று அழைக்கப்படும் கார்த்திகேசு சிவகுமாரன் 02.11.15 அன்று
மீளாத்துயில் கொண்டு விட்டான். புங்குடுதீவகத்தை பிறபப்பிடமாக கொண்ட
அவன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுரியினதும் வட்டுகோட்டை
தொழில்நுடப்க் கல்லூரியினதும் பழைய மாணவனுமாவான்.
யாழ்பப்hணக் கல்லூரியின் கொக்கி அணியின் சிறந்த விளையாட்டு வீரனாகவும்
யாழ் மாவட்டக் கல்லூரி கொக்கி அணியிலும் அவன் சிறப்பான
விளையாட்டுக்காரனாக புகழ் பெற்றிருந்தான். அதுமட்டுமல்லாது ஏனைய
விளையாட்டுக்களிலும் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். சிறப்பாக அவன்
விளையாடுவதால் அவன் சுப்பர் (Super) என அழைக்கப்பட்டான். Read more

 அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு) பிறப்பு 09.04.1956   –   இறப்பு 02.11.2015

PLOTE.Suppu-001கடல் கடந்து வாழ்ந்த கழகத்துக் கண்மணி,
காலமாகியது கண்டு கண்ணீர் மழைத்துளி..
புங்கைநகர் பெற்றெடுத்த புரட்சி இவன்,
ஆரம்ப காலங்களில் ஈழப்புரட்சிக்கு அணிதிரண்ட புத்திரன்..

மக்கள் விடுதலைக் கழகத்தின் மகத்தான தோழன் இவன்,
எண்ணிலடங்கா தோழர்களில் அர்ப்பணிப்புகளின் மத்தியிலே,
கார்ல் மாக்ஸ் சிந்தனையில் களிப்பினில் ஊறியவன்..

விடுதலைப் பயணத்தில் இடைவிலகல் தோன்றியதை,
வெறுப்புடன் பார்த்த – இவன்
இருப்பினும் விலகாது ஓடாதவன்.. Read more

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கூட்டமைப்பு எம்.பி.கள் கடிதம்-

tna (4)நாளை 7ஆம் திகதிக்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர். கூட்டமைப்பைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு நேற்று இந்த கடித்ததை கையளித்துள்ளனர். ‘அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பல தடவைகள் தங்களின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை அவர்களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை. கைதிகளின் விடுதலை தொடர்பில் பலரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்தாலும் கூட, தங்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும். கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம், 17.10.2015 வரை தொடர்ந்தபோது தாங்கள், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தங்களின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால், இன்றுவரை கைதிகளின் விடயத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களோடு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இவ்வாண்டு ஜனவரி 8 அன்று ஒன்றுசேர்ந்து ஜனநாயக ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி தங்களின் தலைமையில் ஒரு நல்லாட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்றுவரை முடிவு காணாமலிருப்பது எமக்கு மிகுந்த அவநம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. 8 முதல் 20 வருடங்களாக நீதிக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் வதைபடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி, விரைவாக ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்’ என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது. 
புத்துவெட்டுவான் கிராம வறிய குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் உதவி-
IMG_2380முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக ஆடுகள், கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்கூடுகள் என்பன புத்துவெட்டுவான் கால்நடை அபவிருத்தி திணைக்களத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி வுட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து பத்துக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இன்றுகாலை 10மணியளவில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து குடும்பங்களுக்கு ஆடுகளும், ஐந்து குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழி வளர்ப்பதற்கான கூடுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன், கழக முக்கியஸ்தர் திரு. பாலசுப்பிரமணியம், பாண்டியன்குளம் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் திருமதி சரஸ்வதி, கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் உதவிகள்

image_7imageமுல்லைத்தீவு மன்னகண்டல் வசந்தபுரத்தில் வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (04.11.2015) காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் வன்னி மேம்பாட்டுக் கழக முக்கியஸ்தர்களினால் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு நல்லினக் கறவை மாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறு ஆறு குடும்பங்களுக்கு ஆறு கறவை மாடுகள் காப்புறுதியுடன் வழங்கிவைக்கப்பட்டன. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் தோழர் மாசிலாமணி மகேந்திரராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் திரு. தவராஜா, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளர் செல்வி ராஜலட்சுமி, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் மத்தியகுழு உறுப்பினர்கள், கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை சங்கத் தலைவர் மற்றும் காப்புறுதி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இதன்போது வசந்தபுரத்திலுள்ள ஆரம்ப பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. மேற்படி வசந்தபுரம் கிராமம் 1977ம் ஆண்டு கலவரத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும்.

மேலும் செய்திகளை வாசிக்க Read more

Hon. Maithripala Sirisena

His Excellency

The President

Democratic Socialist Republic of Sri Lanka

Follow up Written Submission to All Party Discussion held on 23rd of October 2015

Hon Sir:

Further to our oral submissions at the All Party Discussion on 23.10.2015, on behalf of our party, I would like to submit our suggestions in writing with the hope that they will help win the support and confidence of the Tamil people for the measures you will be taking in the future to promote a process of reconciliation.

Here are our views for your Excellency’s perusal:

  • Tamil people voted for you in unprecedented numbers, because they believed that you would find a just political solution that recognizes fundamental self-ruling rights of the tamil community within a united Sri Lanka;
  • Tamil population, since the end of the war in May 2009, have called for an international inquiry into the violations and abuses of human rights that had occurred over a considerable period of time;

Read more