தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவர்களின் விடுதலை மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
மிக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கட்டம் கட்டமாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
தீபாவளி தினமான நேற்று இவர்களில் சிலரை கொழும்பில் சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன், அவர்களில் 32 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படுவர் எனக் கூறியதாக பிளாட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார். Read more