Header image alt text

வடக்கில் வெடிகுண்டுகளை நீக்க அமெரிக்கா பயிற்சி-

minesஇலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு சென்று இதுவரை வெடிக்காதிருக்கும் குண்டுகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்களை நீக்குவதற்காக விஷேட பயிற்சியை வழங்குவது இப்பயிற்சியின் நோக்கமாகும். 10 நாட்கள் இடம்பெறும் இப்பயிற்சி வேலைத் திட்டத்திற்கு கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகள் பல உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள்-

swissஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மாத்திரமே இந்த விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 8315 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இதுவரையில் கிடைத்துள்ள புகலிடக் கோரிகை விண்ணப்பங்களில் 45 வீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

களுவாஞ்சிக்குடியில் கிராம உத்தியோகத்தர் கொலை-

murderமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, சிவபுரம் பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவபுரம் பகுதியிலிருந்து மற்றுமொருவருடன் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்து இருவரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கிராம உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து பயணித்த மற்றைய நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒத்தாச்சி மடம் கிராம உத்தியோகத்தரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் கண்ட சிலரின் சாட்சியத்தின் அடிப்படையில் 22 மற்றும் 24 வயதான சிவபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்களை களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழக புதுவருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

IMG_5942வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியையும், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கோவில்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் 14.04.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளர் திரு கே.தனபாலசிங்கம், சமூக சேவையாளர் திரு சி.சரவணமுத்து ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபரும், கோவில்குளம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான திரு சி.வையாபுரிநாதன், கோவில்குளம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் திரு எஸ்.ஜொயெல் நிரோசன், சமூக ஆர்வலர் திரு ர.சிவசுப்பிரமணியம், கழகத்தின் முன்னாள் தலைவர்களான திரு நீ.பாலசுப்பிரமணியம், திரு செ.தவச்செல்வன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Read more

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழக புதுவருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

IMG_5832வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கழகத்தின் மைதானத்தில் கடந்த 13.04.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு க. சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மற்றும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், கௌரவ உறுப்பினர்கள், கழகத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதூகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு முதன் முறையாக வவுனியா சமளங்குளத்தில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் கிணறு அமைக்க சீமெந்து பைகள் அன்பளிப்பு-

D1புதுக்குடியிருப்பு உடையர்கட்டு தெற்கு மூங்கிலாற்றைச் சேர்ந்த கதிர்ச்செல்வன் கருணாநதி என்பவருக்கு கிணறு அமைப்பதற்காக இராண்டம் கட்டமாக 23520 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் காரணமாக தனது கணவனை இழந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இவர் கிணறு இன்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த வேளையில் எமது சங்கத்திடம் கிணறு கட்டுவதற்கான பொருட்களை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதற் கட்டமாக 2015.12.07 அன்று 12 சீமெந்து பைகளும் இன்று தலா 840 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகளும் (23520ரூபா) வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவுகளான ஆவுஸ்ரோலியாவைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கனகனேந்திரன் ஆகியோர் வழங்கியுள்ளனர். எமது தாயக உறவுகளின் துயர் குறைப்பதற்காக எமது சங்கத்தின் ஊடாக உதவியினை வழங்கிய எமது புலம்பெயர் உறவுகளுக்கு சங்கத்தின் சார்பிலும் எமது உறவுகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

திருமதி. மங்கையகரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)

DSCN0280அண்மையில் இயற்கை எய்திய திருமதி. மங்கையக்கரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுழிபுரம் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தோழர் சின்னக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு அமரர் அவர்களது திரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more

கணணித் தொகுதிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

P1110931வலி மேற்கு சுழிபுரம் பகுதியில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முழுமையான அனுசரணையுடன் இயங்கி வருகின்ற இலவச கல்வி மையத்திற்கு தழிழீழ விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினர் மூன்று கணணித் தொகுதிகளை குறித்த அவ் அமைப்பின் உறுப்பினர் தோழர் சாமியார் (சபாரட்ணம். ஜெயகுமார்-ஜேர்மனி) குறித்த கல்வி நிலையத்தில் கற்பிக்கும் திரு.க.சண்முகநாதன்(இளைப்பாறிய மாவட்ட பதிவாளர்) மற்றும் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் தோழர்.சின்னகுமார் அவர்களிம் கையளித்தார். அண்மையில் குறித்த கல்வி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்ட தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த இலவச நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியின் பொருட்டு இவ் கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Read more