Header image alt text

‘புங்குடுதீவு தாயகம்’ அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!!

mullai01சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட ‘வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்’ முதற்கட்டமாக  வவுனியா பொது வைத்த்யசாலைக்கும், அதனைத் தொடர்ந்து  ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கும். அதனைத் தொடர்ந்து கடந்த   08 ஃ04ஃ2016, முல்லைத்தீவு  மாஞ்சோலை  ‘வைத்தியசாலைக்கு தேவையான சத்திர சிகிச்சை  பொருட்கள்’ வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்  தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட  உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டு சத்திர சிகிச்சை பொருட்களை முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளர்  அவர்களிடம் கையளித்தார்.

இவ் நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு எஸ்.மணிவண்ணன், வன்னி மேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் திரு எஸ்.கஜூரன்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணத்தில் இருந்து உதைபந்தாட்ட அணிக்கு 4 வர் தெரிவு

jaffnaயாழ்மாவட்டத்தில் இருந்து அமெரிக்க உதைபந்தாட்ட விளையாட்டில் தேசிய அணிக்கு நான்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.திணோஜன், யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின்  உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ் கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்.எச.எம்.டி.டி.பி.நாரன்பணாவ, மற்றும் யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்.பிரசாத்குமார் ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க உதைபந்தாட்ட தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர்,கடந்த வருடம் யாழ்மாவட்டத்தில் இவ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் யாழ் மாவட்ட அமைப்பாளரும், பயிற்றுவிப்பாளருமாக திரு.குலசிங்கம்.குலரட்ணம் கடமையாற்றி வருகின்றார். குறித்த பயிற்றுவிப்பாளர் அண்மையில் தேசிய ரீதியில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கி யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடபக் கூடியது.

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
 
peravaiதமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் நேற்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார்.

இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு இன்று யாழ் பொதுநுலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே லக்ஸ்மன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இனிய தழிழ்ப் புத்தாண்டே விடுதலை தந்திடு

nagaranchiniபிறக்கின்ற இவ் தமிழ்ப் புத்தாண்டு தமிழ் மக்களது விதலையை உறுதிப்படுத்திட வேண்டும். கடந்து விட்ட எமது வரலாற்றின் நடந்து வந்த பாதைகளை கனவுகளோடும். களம் பல தந்த  என்றுமே மாறாத வடுக்களோடும் என்றும் பயனித்திடும் உத்தமர்களின் தியாகம் வென்றிடவும். நாம் நம்பி வாக்களித்து இன்று வரையில் எதிர்பார்த்திருக்கும் நல்லாட்சி மெய்ப்பட்டிடவும். ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக சித்திய உதிரத்திற்கு உறுதியான் அரசியல் தீர்வு கிடைத்திடவும். பேரினவாதத்தின் இரும்புசுவர்களுக்குள் இறுகப்பூட்டப்பட்டுள்ள விடுதலை விரும்பிகள் விடுபட்டிடவும். முட்கம்பிகளால் இறுக்கப்பட்டுள்ள எம்மவர் மருதநிலங்கள் விடுபட்டிடவும். எல்லையிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ள எங்கள் நெய்தல் நிலங்கள் எம்மவர்களின் கரங்களுக்குள்  வந்திடவும். எரிக்கப்பட்ட எங்கள் முல்லைகள் செழித்திவும். எங்கள் குறிஞ்சி நிலம் மீண்டும் எம் தலைநகராக மிளிர்திடவும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளை தேடி நித்தமும் கண்ணீர் சிந்திடும் துயர் மிக்க உள்ளங்கள் ஆறுதல் அடைந்திடவும். எங்கள் காவிய நாயகர்களை தடையின்றி நினைவுகூர்ந்திட வழிபிறந்திடவும் இவ் நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்பதோடு. நாம் தழிழர் என்ற உறவோடு ஒயாது எம் பாதங்கள் இலச்சியம் நோக்கி நகர இந் நாளில் ஒன்றிணைந்து சபதம் எடுத்திடுவோம்.
என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்

 

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)-

01வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (10.04.2016) ஞாயிறு மாலை 4மணியளவில் முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி ஜீன்.மக்ஸ்மலா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு க.சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வெங்கல செட்டிக்குள பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வவுனியா வடக்கு கல்வி வலய, முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, தாண்டிக்குளம் குடும்ப நல உத்தியோகஸ்தர் திருமதி எ.ஜெயபவானி, திருநாவற்குளம் சிவன் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் திரு விக்கினபாவனந்தன், கோவில்புளியங்குளம் பாடசாலையின் ஆசிரியர் திருமதி கணேசலிங்கம் ஆகியோருடன், உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி மீரா குணசீலன், செல்வி சபீதா தர்மலிங்கம், பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Read more

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால், முல்லைத்தீவில் குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா, கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_3732களனிப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்ட “சாரல்” நூலின் மூலம் கிடைக்கப்பெற்ற மேலதிக நிதியில், முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கோட்டத்தில், சுதந்திரபுரம் இருட்டுமடு கிராமத்தில் அமைந்துள்ள இருட்டுமடு தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா வெகு சிறப்பாக வித்தியாலய முதல்வர் திரு து.யோகராசா தலைமையில் 08.04.2016 அன்று நடைபெற்றது. அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையுடன், களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தினால் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்காக பெருந்தொகையான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், களனிப் பல்கலைக்கழக பழைய மாணவனுமான திரு சு.காண்டீபன், களனிப் பல்கலைக்கழக மாணவர்களான திரு கி.சதீஸ், திரு க.அனோஜன், திரு இ.பிரசாந்தன், திரு எஸ். விதுசாந்த் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவனுமான எஸ். கேசவன், எஸ்.கஜூரன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர். Read more

வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டு நிறைவு மற்றும் புதுவருட நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி-(படங்கள் இணைப்பு)-

IMG_5622வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ஆவது ஆண்மு நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகை பணம் கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம் (10.04.2016) காலை நடைபெற்றது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு இவ் நிதியுதவியினை றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபனிடம் வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன் மற்றும் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான ராஜசேகர், பிரசாத், குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புது வருட நிகழ்வுகளில் 13.04.2016 அன்று துவிச்சக்கரவண்டி ஓட்ட நிகழ்வும், மரதனும் நடைபெறும். அத்துடன் 14.04.2016 அன்று மைதான நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. Read more

சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொதுஅறிவுப் போட்டிகள்-(படங்கள் இணைப்பு)-

013எதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத் தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றுமுதல் தரம் எட்டுவரையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு நேற்று யாழ். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் அச்சுப்பதித்தல், படம் வரைதல், ஒட்டுச் சித்திரம், சுரண்டல் சித்திரம், பொதுஅறிவுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மேற்படி போட்டிகளிலே புங்குடுதீவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டிகளுக்கு ஆசிரியர்களாகவும் நடுவர்களாகவும் பின்வருவோர் செயற்பட்டிருந்தனர்…
திருமதி சுலோசனம்பிகை தனபாலன் (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம் பிரதம போஷகர்) Read more

கேரள ஆலய வெடிப்புச் சம்பவத்தில் 100ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு-

xzczxcஇந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 102பேர் உயிரிழந்ததோடு 350ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பராவூர் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் 10,000 முதல் 15,000 பேர் வரையில் கலந்துகொண்ட மத பண்டிகை ஒன்றின்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதோடு காயமடைந்தோருக்காக பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குறித்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்காக பட்டாசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்-

ranilசீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 அளவில் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தனது சீன விஜயத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

மேலும், சீனாவின் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

வருட இறுதிக்குள் அரசியல் கைதிகளின் வழக்குகள் முற்றுப்பெறும்-

wijayadasa rajapakseதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் நீதியமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காணும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவித்த அவர், எனினும் இதனைத்தான் செய்யப்போகின்றோம் என வரைவிலக்கணம் எதையும் இப்போது கூற முடியாது என்றார். அது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு தீர்மானம் எடுத்து எதனையும் செய்யமுடியாது என்றும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பிலும் நீதியமைச்சர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது அவர், குறிப்பாக வழக்கு தொடரப்படாமல் உள்ள தமிழ்க் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு இந்த வருட இறுதிக்குள் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மன் நாடாளுமன்ற குழுவின் யாழ்ப்பாண விஐயம்-

sdfsdfdfdவடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு வலி.வடக்கு உயர்பாதுப்பு வலயம் மற்றும் நலன்புரி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து பார்வையிடும் நோக்கில் யாழ். சென்ற மேற்படி குழு ஆட்சி மாற்றத்தின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளது. அத்துடன், மீள்குடியேறிய மக்களின் நலன்கள், தேவைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளதுடன் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி முகாமிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன்போது தமது மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொண்டு தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று பிரச்சினைகளுக்காக மக்கள் ஆர்ப்பாட்டம்-

433வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் மும்முனைப் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் கழிவெண்ணை கலப்பால் மாசடைந்த நன்னீர்ப் பிரச்சினைக்கு தீர்வு, அமைக்கப்படவுள்ள 65000 வீட்டுத்திட்டதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும், சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம் முற்பகல் 11.35 மணியளவில் நிறைவடைந்தது. இதில் புதிய ஜனநாயக மாக்சிச லெலினின்ச கட்சி, நவசமாஜ கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் சுன்னாகம் சனசமூக நிலையத்தாரின் ஒத்துழைப்புடன் பலரும் பங்குபற்றியதுடன் பலரும் பல கோஷங்களை எழுப்பியிருந்தனர். மேலும், பல கோஷங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதில் திருகோணமலை மாவடத்தில் இயங்கு பசுமை திருகோணமலை அமைப்பினரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகர ஆணையாளரின் வாகனத்திற்கு தீ வைப்பு-

ewrereமட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது அலுவலக வாகனத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தீ வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவிக்கையில், சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தபோது இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியதாகவும் வாகனத்தின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த மேலதிக டயர் எரிந்து கொண்டிருந்தபோது தாங்கள் அணைத்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சொக்கோ பொலிஸார் மற்றும் பொலிஸ் தலைமையக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட நிலையில் இரண்டு போத்தல்கள் மற்றும் மிளகாய்த்தூள் பொதி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைதிகளை உள்நாட்டு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை-

jailமாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 14பேரை உள்நாட்டு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினரின் கப்பல் மூலம் கைதிகள் 14 பேரையும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுள் அநேகமானோர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர்களுக்கு 10 முதல் 25 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரணி வாள்வெட்டில் மாணவன் உட்பட நால்வர் படுகாயம்-

cut killed (2)யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் நேற்றிரவு 11 மணியவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக விவசாயபீட மேம்பாட்டுக்கு ஜப்பான் உதவி-

japanயாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்சி மற்றும் பயிற்சி நிலையங்களை உருவாக்க தேசிய பொருளாதார அமைச்சினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைக்கு உதவியாக ஜப்பான் அரசாங்கம் 2,100 மில்லியன் ஷரூபா பணத்தொகையை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண உலர் பிரதேசங்களில் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதனூடாக அதிக எண்ணிக்கையிலான விலங்கு விஞ்ஞானம், விஞ்ஞானம், உயிரியல் விவசாயம், வேளாண்மை விவசாயம், பொறியியல் விவசாயம் மற்றும் பொருளாதார விவசாயம் போன்ற துறைகளை உருவாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

சீனத் திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு நியமனம்-

sddssஇலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில் உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதமர்இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு மூன்று பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என சீன ஜனாதிபதியிடம், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் விசேட குழுவில் உள்ளடங்குவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை கடன் சுமையிலிருந்து தப்பிக்கவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனா சென்று பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையரசால் இடைநிறுத்தப்பட்ட போட் சிட்டி திட்டமும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இவையாவும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் இலங்கையின் கடன்படுகை, கடன் மீளச்செலுத்தல் பிரச்சினைகளில் இருந்து மீளவே இலங்கை, சீனாவுடன் உடன்படிக்கைகளுக்கு சென்றுள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா, ஆய்வாளர்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்தியாவும், அமெரிக்காவும் உரிய முறையில் உதவி வழங்காமைiயை அடுத்தே இலங்கை, சீனாவுடன் உறவுகளை புதுப்பிக்க நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை, சீனாவின் அவசரக் கடன்களுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் தேவையென கொழும்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரத் திட்டத்தில் எவரும் முதலீடு செய்யலாம்-பிரதமர்-

ranilஇந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ள துறைமுக நகரத் திட்டத்தில், அனைத்து நாட்டினரும் முதலிட முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், நாடு திரும்பும் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். ‘துறைமுக நகரத் திட்டம் என்பது சீனாவுக்கு மாத்திரமானதல்ல. அது தென்னாசியாவின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் முதலிடுவதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஆகவே, இத்திட்டத்தில் அனைத்து நாடுகளும் முதலிட முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். எமது பொருளாதாரத் திட்டத்தினை நாங்கள் மாற்றவில்லை. ஆனால், துறைமுக நகரத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்படாமலிருந்த விடயங்களைச் சரிசெய்துள்ளோம். துறைமுக நகரத் திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ள காணி, அரசாங்கத்துக்கே சொந்தமானது. அதனை 99 வருட நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கின்றோம். இதுவொரு முதலீட்டுத் திட்ட கட்டுமானமாகும். இத்திட்டத்தில் முதலிட விரும்புபவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதலிட முடியும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். Read more

இலங்கை சீனாவிற்கிடையே ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

ewewewஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனப் பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாக பிரதமர் காரியாலயம் கூறியுள்ளது. வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதவிர 500 மில்லியன் யுவான் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனப் பிரதமர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க, சீன அரசாங்கம் தயாராக உள்ளது என்று சீன பிரதமர் கூறியுள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை விரைவில் ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று முற்பகல், சீனாவின் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இதில் சீன வர்த்தக சங்கத்தின் தலைவர் உட்பட 400 இற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-

ertrtttயாழ். தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பிரதேச நிலவை அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் எனவும், இதற்கான நில அளவை இன்று இடம்பெறும் எனவும் அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது. இதற்கமைய இன்று காலை நில அளவை அலுவலகத்துக்கு முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகளை அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். சம்பவத்தின்போது ஆர்ப்பாட்;டக்காரர்களுடன் உரையாடிய நில அளவை அதிகாரிகள், ‘இச்சுவீகரிப்பை முற்றாக நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இல்லை. எனினும், இன்றைய தினம் அளவை செய்யச் செல்லவில்லை. எமது மேலதிகாரிகள் தெரிவித்தால் மாத்திரமே எம்மால் அளவை செய்வதை நிறுத்தமுடியும்’ என தெரிவித்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கின் முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு-

sfdfdfdfdfdfffகிழக்கு மாகாணத்தில் மாநகர சபையினால் திறக்கப்படும் முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் ஆயுள்வேத திணைக்களத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாநகர சபை இதனை திறந்து வைத்துள்ளது. கிழக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இதுவாகும்.

மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற திறப்புவிழா வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக தலைவர் எம்.மாமாங்கராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சித்த ஆயுள்வேத வைத்தியதிகாரி திருமதி பார்த்திபன் உட்பட ஆயுள்வேத திணைக்கள அதிகாரிகள் மாநகர சபை அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இவ்வைத்தியசாலை மூலமாக இலவச சித்த ஆயுள்வேத வைத்தியவசதிகளை வழங்கவுள்ளதாக இங்கு உரையாற்றிய மாநகர ஆணையாளர் கூறினார்.

சாவகச்சேரி வெடிபொருள் தொடர்பில் மேலும் ஐவர் கைது-

werererrerயாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபரின் அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிக இட நெருக்கடி-

jailநாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிக இடநெருக்கடி காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் அதிகப்படியாக 8000 பேர்வரை மட்டுமே இருக்கலாம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷாந்த தனசிங்க கூறியுள்ளார்.

ஆனால் தற்போது சிறைச்சாலைகளில் 18,000 பேர் வரை உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களுள் அதிகமானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷாந்த தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.