Header image alt text

தமிழக சட்டசபை தேர்தல் 2016

TamilNadu-assemblyதமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர். Read more

நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவு- இலங்கை ராணுவம்

malayakamஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக, மலையகப் பகுதியான கேகாலை மாவட்டத்தில் தொடர் மழையும் அதனை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டன. இச்சூழலில், நிலச்சரிவில் சிக்கி 134 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் தளபதி சுதாந்த ரனசிங்க பிபிசியிடம் பேசுகையில், அரநாயக்க பிரதேச நிலச்சரிவில் சிக்கி உள்ளோரை உயிருடன் மீட்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட போது காணமல் போன 134 பேர் இந்நேரம் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறேன். இருந்தாலும், எங்களுடைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். மீட்கப்படும் சடலங்கள் உடனடியாக உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். என்றார்.
மேலும், அரநாயக்க பிரதேசத்தில் இதுவரை எந்த உடல்களையும் கண்டெடுக்கவில்லை எனவும், புலத்கோபிட்டிய பிரதேசத்தில் மேலும் 5 உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் 16 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த பிரதேசத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.

ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ள எகிப்து விமானம்
 
EgyptAir-flightபாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்ததாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவன தகவல் மேலும் கூறியுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி (11,300 மீட்டர்) உயரத்தில், இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கெய்ரோ நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு (00:45 ஜிஎம்டி நேரம்) இந்த விமானம் ராடரின் தொடர்பை இழந்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தவுடன், அது குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என்று ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

P1370765முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றுகாலை 9.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவு தினத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கபட்டது. யாழ் பல்கலைகழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழக தொழிற்சங்கம் மற்றும் ஆசிரிய பீடம் ஆகியவற்றின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மட்டக்களப்பு வாகரை மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இன்று இடம்பெற்றது.
Read more

வித்தியா கொலை வழக்கு, மரபணு அறிக்கை சமர்ப்பிப்பு-

weeweeewபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணுப் (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரில், பத்து பேரது வழக்கு தனியாகவும், ஏனைய இருவரதும் வழக்கு தனியாகவுமே இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், இன்று இவ்விரு வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, ஒரு வழக்காகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மிக நீண்டகாலமாக மன்றில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அப்பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தினால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு-

unnamedதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு தொடங்கியது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய முன்றிலில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவரும் நினைவு கூரப்பட்டனர். அதன் பின்னர், அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா தேவாலயத்தில், ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் விசேட வழிபாடு நடைபெற்றது. இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வேண்டுதலும் நடைப்பெற்றது. இந்த நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ். வசந்தராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உப குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளின் உறுப்பினர்களும் பெருமளவு பொது மக்களும் கலந்துகொண்டனர்.
Read more

பொதுமக்களிடம் உதவி கோரும் மாவட்ட செயலகங்கள்-

wqewewddஇயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்ட செயலகம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக பொதுமக்களிடம் உலர் உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார உதவிகளையும் கோரியுள்ளது. இவ்வாறு உதவிகளை வழங்குவதற்காக 071 352 70 36 மற்றும் 033 222 22 35 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என்று தெரரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புத்தளம் மாவட்ட செயலகமும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 6000 பேர் 50 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் என்.எம்.எச். இந்திரானந்த தெரிவித்தார். அதன்படி புத்தளம் மாவட்ட செயலகத்தில் உதவிப் பொருட்களை ஒப்படைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உதவிகளை வழங்குவதற்காக 032 22 65 225 , 032 22 65 756 , 032 22 65 235 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை கேகாலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கேகாலை மாவட்ட செயலாளர் பொதுமக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பு

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெற்றோர்களாலும் புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு மையத்தினாலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்ததை விண்ணப்பத்தை அடுத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்க்கும் மாணவி செல்வி டயானா மற்றும் உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி செல்வி அருளினி ஆகிய இரு மாணவர்களுக்கு இத் துவிசக்கர வண்டிகள் இன்று அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.

vadduhindu01vadduhindu02

ஊழல் சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுப்போம் -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

maithree_camronஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்றுவரும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.
நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கூறினார்.
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

London1உலகளாவிய ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்இ பொதுமக்களின் காணிகளை விடுவித்தல்இ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற வாக்குறுதிகளை இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்திருந்தாலும்இ அந்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் வை. சிவரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதாகவும்இ அவ்வேளையில் நடந்த குற்றச்செயல்களுடன் அவருக்கும் பொறுப்பு இருப்பதாகவும் சிவரதன் கூறினார்.
லண்டன் காமன்வெல்த் செயலகத்துக்கு அருகே புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்
 
Ruvanதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் பாதுகாப்புப் பிரிவினருடனேயே சென்றதாக தெரியவந்துள்ளது எனவும், பிரச்சினை ஏற்படும் வகையில் அவர் செல்லவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

pasil கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மாத்தறை பகுதியில் காணியொன்றை வாங்கியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்துள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக பசில் ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் விசேட பொலிஸ் பிரிவின் முன்னால் ஆஜரானார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நிதி மோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ் பிரிவுக்கு மாதம் ஒருமுறை சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அவரது கீழிருந்த திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே, காணிக் கொள்வனவு தொடர்பான புதிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் அதிபரான ஜீல்மா ரூஸோஃப் பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுகின்றார்.

brezilபிரேசிலின் அதிபர் ஜீல்மா ரூஸோஃப் மீதான பதவிநீக்க விசாரணைக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் செனட்சபை வாக்களித்துள்ளது. அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இரவு முழுவதும் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாக இந்த வாக்கெடுப்பு நடந்தது.

அதிபரை பதவி நீக்குவதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று 55 செனட் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர் மீது விசாரணை நடத்தப்படக்கூடாது என்று 22 பேர் வாக்களித்தனர்.

இந்த முடிவை அடுத்து, நாட்டின் முதல் பெண் அதிபரான ஜீல்மா, அவரது பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுகின்றார்.

நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையின் அளவை மறைத்ததாக தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அதிபர் ஜீல்மா உறுதியாக மறுக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு அவர் இனி முகம்கொடுக்க வேண்டும்.

கோடிக்கணக்கான பிரேசில் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்தாலும், பின்னர் நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய 13- ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக ரூஸோஃப் அகற்றப்படுகின்றார

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம்-

maiththiripalaபிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் நுமு 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமஷரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுப்பு-

jaffna courtsபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேகநபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கின் சந்தேகநபர்கள் 09 பேரும் இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி சட்டமா அதிபரின் சார்பில் அரச தரப்பு சட்டதரணியான சக்தி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

10 இலங்கையர் உட்பட 19 பேர் மலேஷியாவில் கைது-

arrestபோலி பாஸ்போட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவம் தொடர்பில், 10 இலங்கையர்கள் உட்பட 19 பேர் மலேஷியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேஷிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபர்களுள் மலேஷிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு மலேஷியப் பிரஜைகளும், மூன்று இந்தியர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் பத்துப் பேரில் ஐவரை போலி பாஸ்போட் மூலம் ஸ்விசர்லாந்தின் ஜெனிவா நகருக்கு அனுப்பிவைக்க சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏனைய ஐந்து இலங்கையர்களும் குறித்த சட்டவிரோத வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என, செய்திகள் கூறுகின்றன.

சோபித தேரரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமனம்-

sofitharகோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவர் அடங்கிய குழுவொன்று, கொழும்பு பிரதம நீதவானால் நியமிக்கப்பட்டுள்ளது. சோபித தேரரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விட்டமைக்கான காரணங்களை கண்டறியவே குறித்த குழு, நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜெயசிங்க, இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். மேலும், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், வைத்தியர்களான குமுதினி ரணதுங்க, நிமாலி பெர்ணான்டோ மற்றும் இரேஸ் விஜயமான்னே ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தழிழர்களின் கருத்துக்களை கேட்டறிந்த ஜயம்பதி-

jayampathiஇலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் பலரது கருத்துக்களையும் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான புலம்பெயர் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர் கேட்டறிந்து கொண்டார். ஹபோர் காரணமாக அல்லது போருடன் தொடர்புடைய காரணங்களால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எம்மவர்கள் என்பதை உணர்ந்துள்ளோம். அரசியல் ரீதியாக தீவிரமாக செயற்பட்டு வரும் அவர்களிடமும் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்படுவது தொடர்பில் அவர்களது கருத்துக்களை கேட்பது சரியானது. Read more

அதிரடிப்படையை களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு-

ilancheliyanயாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது, யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயம்-

maithripala3பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமஷரூனின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்ததும் ஜனாதிபதி, இந்தியா செல்லவுள்ளார்.

அங்கு மத்திய பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் கும்பமேள சமய வைபத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் மற்றும் யோசித்தவிடம் வாக்குமூலம் பதிவு-

namalமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோசித்த ராஜபக்ஷ ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார். கடந்த தேர்தல் காலப் பகுதியில் விமானங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனைத் தீர்ப்பின் வழக்குப் புத்தகம் மாயம்-

courtsகொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகேயை, சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மரணதண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குப்புத்தகம் மாயமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

1986ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதியோ அல்லது அதனை அண்மித்த நாளொன்றிலோ, சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த டபிள்யூ. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர், 22 வருடங்களுக்குப் பின்னர், கடந்த சனிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டார். கருணாரத்ன லியனகே, தனது வீட்டு விறாந்தையில் படுத்திருந்தபோதே, சந்தேகநபர் அவரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தலைமறைவாகியிருந்தார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, 1994ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதியன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. Read more