Header image alt text

police-station-jaffnaயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, கான்ஸ்டபிளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

பணிநிமித்தம் இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர். Read more

Prisonபசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான ´லே´-யில் இருக்கும் புய்மோ சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரவில் கைதிகளில் ஒரு பிரிவினர் சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பி ஓடினர். Read more

mulai0212.05.2017 அன்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி அலுவலகத்தில் அவ் மாவட்டத்தில் வறுமைகோட்டிற்கு  கீழ் வாழும் மக்களின் போசாக்குமட்டத்தை  உயர்த்துவதற்காகவும் வருவாய் தரக்கூடிய கோழிவளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காகவும் முட்டை இடும்  நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.,
வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கௌரவ க. சிவநேசன் அவர்களின் பரிந்துரைக்கமைய  குறித்தொதுக்கப்பட்ட மாகாணசபையின்  நிதியில் இருந்து 25 குடும்பங்களுக்கு   மாவட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.
Read more

01இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுடன், இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துணை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
Read more

DSC06993இந்திரராசா குடும்பத்தினருடைய இரண்டாவது இறுவெட்டு வெளியீட்டு விழா வட்டுவாகல் சப்தகன்னியர் கோவில் முன்றலில் வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வை முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் திரு கமலகாந்தன் தலைமை ஏற்று நடத்தினார் ஆரம்ப உரை சேதுபதியினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன் மற்றும் து.ரவிகரன், வன்னிமேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, பூசகர் விநாயகமூர்த்தி, சப்தகன்னியர் கோவில் பூசகர் மற்றும் பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர்கள் மற்றும் திருமதி சாந்தி கமலகாந்தன் கலாச்சார பேரவை முல்லைத்தீவு மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். Read more

sds (2)யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இராணுவத்தினர் மூவரும் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ceylon-teachers-unionஅதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதற்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து அதிபர்களையும் கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

2009ம் ஆண்டு அதிபர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 4200 பேருக்கு இதுவரை பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். அத்துடன் சுமார் மேலும் 3000 அதிபர்களுக்கு நியமனம் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ssகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டு 4 நிரந்தர வீடுகளும் 6 தற்காலிக வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் திடீரென சுழல் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் மக்களது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள வாழை, பப்பாசி போன்ற பயன் தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. Read more

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

sdfdsfdsதந்தை செல்வாவின் 40ஆம் ஆண்டு நினைவுதினம் அகில இலங்கை தந்தை செல்வா அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நினைவு தின நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தந்தை செல்வா அகில இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் நினைவுப் பரிசில்களும், முதியோர்க்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் மற்றும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. Read more