Header image alt text

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவற்றை, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென, ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான, நேற்றைய கூட்டத்திலேயே மேற்கண்டவாறு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நேற்று (25)நடைபெற்றது. Read more

பாரதூரமான மனித படுகொலைகளை செய்தவர்களையும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சலையில் இல்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தண்டனை உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்திற்கு தாம் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சபை அமர்வு இன்று முற்பகல் 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, சபாநாயகரின் அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டபோதே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென,

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகள் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போதே, அந்த நாடுகளின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.

நகரசபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமநாதன் ஆகிய இருவரும், கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். Read more

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் 2018 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2017 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இம்முறை அது இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தற்போது யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தனது எதிர்கால அரசியல் குறித்து நிகழ்த்தும் விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் அதிகாரக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையினர், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரநிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தில் நாளை பிற்பகல் 1 மணியளவில் கூடவுள்ள இவ் அரசியலமைப்பு சபையில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 27ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். Read more

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, மாகாண ஆளுநர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டில், மாகாண சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்றது. Read more

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுதங்கள் அகற்றுதல் மற்றும் குறைத்தல் அலுவலக பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த தினம் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.