Header image alt text

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதை தான் எதிர்க்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அரசமைப்பு வரைபு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பு வரைபுக்கு எதிர்ப்பைப் போல அரசமைப்பு திருத்தங்களுக்கும் எதிர்ப்பு இல்லையென்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம். தற்போதைய அரசமைப்பில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளைய தினம் பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கபட்டுள்ளது. இந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தபட்டது. Read more

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ஆலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம்(மோகன்)-கட்சியின் உபதலைவர், வவுனியா நகரசபை உறுப்பினர்), சு.காண்டீபன்-வவுனியா நகரசபை உறுப்பினர்), த.யோகராஜா-கட்சியின் தேசிய அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. Read more

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர் என தெரிவிக்கப்படுகின்றது. மீன்பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்றிருந்தார். Read more

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது .
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,USAID நிறுவனத்தின் பணிப்பாளர் திரு .கார்த்திகேயன் ,தமிழ் விருட்சத்தின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணன் ,சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .மகேஸ்வரி,முன்பள்ளி ஆசிரியர் திருமதி .மதியரசி, சமுக ஆர்வலர் திரு .சௌந்தர் ,காட்டு விநாயகர் ஆலய தலைவர் திரு .சிவகாந்தன் ,மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . இத்துடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது . Read more

யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் திருமதி சஞ்சீவன் ராதிகா, தென்மராட்சி உடற்கல்வி, வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. Read more

யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிலையத்தினை திறந்துவைத்தார்கள். Read more

நெடுங்கேணி மாமடு சந்தி (முல்லைதீவு மாவட்டம்) வெள்ளை பிள்ளையார் ஆலய கற்பக அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு (20.01.2019) இன்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு .S சுபாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திருமதி .சாந்தி ஸ்ரீகந்தராஜா ,கௌரவ .DR .சிவமோகன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் , பிரதேச சபை உறுப்பினர் திரு .சத்தியசீலன் ,ஒட்டிசுட்டான் செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு .மோகன் ,அறநெறி பாடசாலையின் ஒருங்கிணைப்பாளர் திரு . சுகந்தன் , ஆலய பரிபாலன சபையின் பொருளாளரும் ,காப்பாளருமான திரு .தர்மலிங்கம் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ,அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,ஊடகவியலாளர்கள் ,மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் . Read more

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்மராட்சி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அனுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் செல்வி வினோஜிதா, சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர் மயூரன், சாவகச்சேரி நகரசபையின் உப தலைவர் பாலமயூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more