மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். Read more
யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.
வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.
வவுனியா, புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரொருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்குள் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறீட் கட்டையுடன் மோதி விபத்துக்குள்ளானரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.