 முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் கடந்த 06.07.2019 சனிக்கிழமை 108 பானைகளை வைத்து வருடாந்தப் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தும் வகையில் “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் கடந்த 06.07.2019 சனிக்கிழமை 108 பானைகளை வைத்து வருடாந்தப் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. 
இந்த “108” பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்களும் ஒழுங்கு செய்திருந்தனர். இப் பொங்கல் விழாவில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் பொருளாளருமான கந்தையா சிவநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், திரு. அருந்தவபாலன் மற்றும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more
 
		     குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 166 பேரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் 166 பேரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  அமெரிக்காவின் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் கிளை அல்லது அதனுடன் தொடர்புயை வேறு எந்த நிறுவனத்தையும் இலங்கையில் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை என நீதி அமைச்சர் தலாத அதுகோரல தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் கிளை அல்லது அதனுடன் தொடர்புயை வேறு எந்த நிறுவனத்தையும் இலங்கையில் நிறுவ அனுமதி வழங்கப்படவில்லை என நீதி அமைச்சர் தலாத அதுகோரல தெரிவித்துள்ளார்.  மன்னார் – பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மன்னார் – பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 