பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
ரமோன் அல்கராஸ் மற்றும் டவோ டெல்சூர் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களின் கட்டளைத்த தளபதி உள்ளிட்ட குழுவினர், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more
குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வெளியேறும் பிரிவினூடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.