Header image alt text

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, மே 6ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை மீண்டும் மே 6ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். Read more

இலங்கையில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுக்களை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். Read more

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இந்த சேவை 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான ஷாஹீனா அப்பாஸி, வெலிசர கடற்படை முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான திருமதி ஷாஹீனா அப்பாசியை, இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். Read more

கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மற்றைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். Read more

சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்று இரவு நாட்டுக்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 484 மாணவர்களை நாட்டுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் கூறியுள்ளார். இதேவேளை, தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவர, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனாவுக்கான பதில் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களான வி.ராகவன், ஜி.ரி.லிங்கநாதன் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், யாழ். மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், பல்வேறு மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இதன் ஒரு அங்கமாக கொடிகாமம் மற்றும் கெற்பேலி கிராமங்களில் பொதுமக்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு, இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Read more

உலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொனோரா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பான முறையில் தனி அறைகளில் அவர்களை வைத்த 2 வாரங்களுக்கு கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.