சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வெளியேறும் பிரிவினூடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.