Header image alt text

சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வெளியேறும் பிரிவினூடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜனவரி 29ம் திகதிவரை நிறுத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Read more

ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்த சேவை கடந்த வெள்ளிக்கிழமை வரை பரிசோதனை மட்டத்தில் காணப்பட்டது. Read more

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். Read more

சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். Read more

பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கமைய இங்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி சந்திக்கவுள்ளார். Read more

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்துள்ளனர். அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பின் அவசியத்தையும் இரா சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் விமான பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. (அரசாங்க தகவல் திணைக்களம்)