1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர்கள் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 35வது ஆண்டு நினைவாக,
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த, கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியினை, ‘தாயக மக்களின் மீள் எழுச்சி’க்கான செயற்திட்டத்திற்கமைய புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை வழங்கியிருந்தது. Read more
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனும் புதிய அரசியல் கூட்டணி வடக்கில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வயம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளர்.
33 புதிய கட்சிகள் பதிவு செய்தலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று குண்டுவெடிப்பு இடம்பெற்ற சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் பூட்டி இருந்த குறித்த வீடு பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கு அதிகமான வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.