31ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2020) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.