கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு, நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர, கல்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.