வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு.இராமசாமி கிருஷ்ணபிள்ளை(தோழர் கிட்டு) அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த இவர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)