தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அங்கத்தவர்கள் இன்று (10) தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவு செய்யப்பட்டதோடு அதன் அங்கத்தவர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.