Header image alt text

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட அவசியமில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறப்பு அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(10)  வெளியிடுவார் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

இச்சம்பவம், அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளார். Read more

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1373வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள காணாமற் போனவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. Read more