மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம், 234 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
மொத்தமாக 437 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, மஹர சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோரிடையே, 35 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் 75 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.