Rவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், நாளை (21) முதல் மீண்டும் இயங்குமென, வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக, வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பாடசாலைகள் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் நாளை முதல் திறக்கப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.