கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

வெலிக்கடை சிறைக் கைதியான 68 வயதுடைய நபரும், கொழும்பு 15 ஐச் சேர்ந்த ஆண் ஒருவரும், தர்காநகர் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணும், கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.