வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 5ஆம் திகதி முதல் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். இதுவரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன், யாழ் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே, திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.