அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது