சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இலங்கையில் முதலாவதாக நிறுவப்பெற்ற பூந்தோட்டம் சுனாமி நினைவு தூபியில் இன்று இடம்பெற்றபோது, மரணித்த அத்தனை உறவுகளின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.

எமது கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருமான சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் த.யோகராஜா (யோகன்) ஆகியோரூம் கலந்து கொண்டிருந்தனர்.