11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்கள்
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்கள்
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது. Read more
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் ஆண்டவர் (அரசையா ஆறுமுகராசா) அவர்கள் நேற்று (10.12.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 02 நாட்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 10 December 2022
Posted in செய்திகள்
10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 10 December 2022
Posted in செய்திகள்
சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார். Read more
Posted by plotenewseditor on 10 December 2022
Posted in செய்திகள்
நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புத்தகங்கள் போதிய அளவில் கிடைக்காததால் முறைப்பாடுகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் நிலவும் காகிதத் தட்டுப்பாடு, காகித விலை உயர்வு போன்ற காரணங்களால் பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான புத்தக விநியோகம் பாதியாகக் குறைந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 December 2022
Posted in செய்திகள்
2022ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையின் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ஆண்டின் முதல் பதினொரு மாதங்களுக்கான (ஜனவரி – நவம்பர்) மொத்த எண்ணிக்கை 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 December 2022
Posted in செய்திகள்
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கிலேயே அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 December 2022
Posted in செய்திகள்
நன்றி, உப சபாநாயகர் அவர்களே!
இன்று நாங்கள் மிக முக்கியமான மூன்று அமைச்சுக்களின் தலைப்பின் கீழே இந்த விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
இதிலே நிதியமைச்சு, பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்:டு அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கீழ் வருகின்றன. இவை மிக முக்கியமான அமைச்சுக்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த நாடு பொருளாதாரத்திலே மிகவும் பின்னடைவாக இருந்த ஒரு இக்கட்டான காலகட்டத்திலே இந்த சபையால் நிரந்தரமாக மீதிக் காலத்திற்காக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். Read more