ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழப்பு-

sirisenaகோடரித் தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டிருந்தார். இதேநேரம் பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 3மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் 26ம் திகதி, கோடரி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.