யாழ். சுன்னாகம் மயிலணி பகுதியில் மூன்று வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (08.07.2019) திங்கட்கிழமை இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியில் மேற்படி மூன்று வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், ஊர்ப்பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.